மும்பை: டி20 உலக கோப்பை 2026 இறுதிப் போட்டி மார்ச் 8 ஆம் தேதி நாளை ஞாயிற்றுகிழமை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா தனது 3வது டி20 உலகக் கோப்பையை வெல்லும் நோக்கில், நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்திற்கு முன்னதாக, இந்திய சுழற்பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஷ்வின், அணியின் முக்கிய வீரர்கள் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான வியூகங்கள் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அஷ்வின், இந்திய அணியின் வெற்றிப் பயணத்தில் முக்கியப் பங்காற்றிய வீரராக ஷிவம் தூபேயைப் பாராட்டினார். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், தூபே வெறும் 25 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் அதிரடியாக 43 ரன்கள் குவித்து, 172 ஸ்ட்ரைக் ரேட்டில் அசத்தினார்.

தனது யூடியூப் சேனலில் பேசிய அஷ்வின் "மிகவும் சிறப்பாக விளையாடி, ஆனால் அதிகம் பேசப்படாத ஒரு வீரரைப் பற்றிப் பேசுவது அவசியம். நான் ஷிவம் தூபேயைப் பற்றித்தான் பேசுகிறேன். அனைத்து ரஷித் மற்றும் பிற பந்துவீச்சாளர்களும் தாங்கள் 10 ரன்கள் குறைவாக அடித்து விரட்ட முடியுமா என்றுதான் சிந்திக்க வேண்டும். ரஷித் சில நல்ல மோசமான பந்துகளை வீசினார்," என்றார்.

இந்தத் தொடரில் தூபே, இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளில் 34.83 சராசரியுடன், ஒரு அரை சதத்துடன் 209 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 159.54 ஆக உள்ளது. இறுதிப் போட்டியில் நியூசிலாந்து தூபேயைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அஷ்வின் வலியுறுத்தினார்.
"நீங்கள் நியூசிலாந்து அணியாக இருந்தால், ஷிவம் தூபேவை மிகவும் அமைதியாக வைத்திருக்க வேண்டும். சுழற்பந்து வீச்சாளர்கள் களத்தில் செயல்படத் தொடங்கும்போது அவர் ஆட்டத்தை உங்களிடமிருந்து தட்டிப்பறித்து விடுவார். நியூசிலாந்து சான்ட்னர் மற்றும் ரவீந்திரா போன்றவர்களை தூபேக்கு எதிராகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முயற்சிக்கும் என்று நான் நினைக்கிறேன்."
"நீங்கள் லைன் மற்றும் லென்த்தில் தவறினால், தூபே பல ரன்களை எடுப்பார். அவர் நியூசிலாந்து கண்காணிக்க வேண்டிய ஒருவர், இல்லையெனில், இந்த இறுதிப் போட்டி ஒரு வழிப்பாதையாகிவிடும், மேலும் அவர் ஆட்டத்தை அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்வார்."இறுதிப் போட்டிக்கு முன்னதாக அஷ்வின் சில முக்கிய ஆட்ட மோதல்கள் குறித்தும் அஸ்வின் பேசினார். நியூசிலாந்தின் திறமையான ஆஃப் ஸ்பின்னர் கோல் மெக்கோஞ்சிக்கு எதிராக அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
அபிஷேக் சிங்கிள் எடுத்து சஞ்சு சாம்சனிடம் பந்தை கொடுத்து, சாம்சனை மெக்கோஞ்சியை எதிர்கொள்ளச் செய்வதே சிறந்த உத்தி என அஷ்வின் அறிவுறுத்தினார்.இது குறித்து பேசிய அஸ்வின், "மெக்கோஞ்சி மிகவும் திறமையான பந்துவீச்சாளர். அவர் மிகவும் புத்திசாலி. எங்களிடம் இஷான் கிஷனும் அபிஷேக்கும் இருக்கிறார்கள். இஷான் ஆஃப்-சைடிலும் அபிஷேக் லெக்-சைடிலும் அவரை எதிர்கொள்வது கடினமாக இருக்கும்.
மெக்கோஞ்சி புத்திசாலித்தனமாகச் செயல்படுவார். எங்கள் வீரர்களிடம் பதில் உண்டா? இஷான் ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முடியுமா? அபிஷேக் சிங்கிள்ஸ் எடுத்து சாம்சனிடம் பந்தை கொடுத்து, ஆஃப்-ஸ்பின்னரை சமாளிக்க சொல்வதே புத்திசாலிடததனம். எங்கள் முதல் மூன்று பேட்ஸ்மேன்களின் விழிப்புணர்வை நான் எதிர்பார்க்கிறேன்," என்றார்.அக்சர் படேலை இந்தியாவின் "கொண்டாடப்படாத ஹீரோ, முழுமையான சாம்பியன்" என்று அஷ்வின் வர்ணித்தார். "இந்திய அணிக்கு நெருக்கடி வரும்போது இவரைப் பயன்படுத்தலாம். அவர் அக்சர் படேல். இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து தொடக்க வீரர் ஃபின் ஆலனை ஆட்டமிழக்கச் செய்வதில் அவர் முக்கியப் பங்கை வகிப்பார்," என்றும் அஷ்வின் கருத்து தெரிவித்தார்.

ஃபின் ஆலன் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நம்பமுடியாத வகையில் 33 பந்துகளில் சதம் அடித்து அச்சுறுத்தும் ஃபார்மில் உள்ளார். "சூர்யா இந்த வாய்ப்பைத் தவறவிடாமல், ஃபின் பேட்டிங் செய்யும்போது அக்சரை களமிறக்க வேண்டும். இந்திய அணி புத்திசாலித்தனமாக செயல்பட்டால், அக்சரைப் பயன்படுத்தி ஃபின் ஆலனை வெளியேற்ற முடியும்," என்று அஷ்வின் வலியுறுத்தினார்.