நியூசிலாந்து பேட்டிங்
அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. பும்ரா, புவனேஸ்வர் குமார் அசத்தலாக பந்துவீசினர். முதல் பத்து ஓவர்களில் நியூசிலாந்து அணி 27 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பீல்டிங்
அப்போது ஜடேஜாவின் பீல்டிங் மிகவும் அற்புதமாக இருந்தது. ஜடேஜா பல பவுண்டரிகளை தடுத்து, நியூசிலாந்து அணிக்கு கடும் அழுத்தம் கொடுத்தார். ஜடேஜா இருக்கும் திசையில் ஒரு பந்து கூட அவரை தாண்டிச் செல்லவில்லை.
பந்துவீச்சு அபாரம்
அடுத்து பந்துவீச்சிலும் ஜடேஜா அசத்தினார். முதலில் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை. அதன் பின் ஜடேஜா, துவக்க வீரர் ஹென்றி நிக்கோல்ஸ்-இன் விக்கெட்டை சாய்த்தார். அதன் பின் அவருக்கு நம்பிக்கை அதிகரித்தது. முதலில் ஓவருக்கு 5 ரன்களுக்கும் மேல் கொடுத்து வந்த ஜடேஜா, பத்து ஓவர்கள் வீசி முடித்த போது 34 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார்.
டெய்லர் ரன் அவுட்
அதன் பின் மழையால் போட்டி நிறுத்தப்பட்டு மறுநாள் தொடங்கியது. நியூசிலாந்து அணி 250 ரன்கள் எடுக்க விடக் கூடாது என்ற நிலையில், ஜடேஜா அபார த்ரோ மூலம் அதிரடி பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் விக்கெட்டை வீழ்த்தினார்.
அற்புத கேட்ச்
அடுத்து டாம் லாதம் கொடுத்த கடின கேட்ச்சை பிடித்து அசத்தினார். நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 239 ரன்கள் எடுத்தது. ஜடேஜா ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். ஜடேஜாவை ஏன் இத்தனை போட்டிகளில் களமிறக்கவில்லை என கேள்வி எழுப்பினர். எனினும், இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இந்திய அணி சேஸிங்கில் சொதப்பியது. ரோஹித், கோலி, ராகுல் தலா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.