மோசமான பேட்டிங்
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி மிகவும் மந்தமாக பேட்டிங் செய்தது. அப்போது இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருப்பதாக பலரும் கூறி வந்தனர்.
மந்தமான பிட்ச் தேர்வு
ஆனால், போட்டி நடைபெற்ற மான்செஸ்டர் மைதானத்தில் உள்ள பல பிட்ச்களில் மிகவும் மந்தமான பிட்ச்சை தேர்வு செய்தது தான் காரணம் என என இங்கிலாந்து நாட்டை சேர்ந்த முன்னாள் வீரர் ஃபவுலர் கூறினார். அவர் உள்ளூர் கவுன்டி போட்டிகளில் அதே மைதானத்தில் ஏராளமான போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்டவர்.
குப்பை பிட்ச்கள்
அடுத்து மற்றொரு, முன்னாள் வீரர் மார்க் புட்சர் கூறுகையில், இந்த தொடரில் பல குப்பை பிட்ச்கள் பயன்படுத்தப்பட்டன என குறிப்பிட்டார். அவர்கள் முதல் நாள் போட்டியின் போதே இந்த கருத்தை கூறினார்கள்.
ஆடுகளம் மாறியது
அதன் பின் மழை பெய்து பாதி நாள் போட்டி தடைபட்டது. மறுநாள், ஏற்கனவே மந்தமான ஆடுகளம் இன்னும் மோசமாக மாறியது. பேட்ஸ்மேன்கள் பந்தை கணிக்கவே முடியாத அளவு பிட்ச் மாறியது.
டாப் ஆர்டர் சரிவு
இந்திய அணியின் டாப் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலியால் கூட தாக்குப் பிடித்து ஆட முடியவில்லை. ரோஹித், கோலி, ராகுல் என மூன்று டாப் ஆர்டர் வீரர்களும் வெறும் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஐசிசி பதில்
அடுத்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் போராடினாலும், இந்தியா 92 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதற்கு மோசமான பிட்ச் தான் காரணம் என்பதை இங்கிலாந்து முன்னாள் வீரர்களே கூறி விட்டனர். ஐசிசி பதில் சொல்லுமா?