துபாய்: இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான், வலியுறுத்தியுள்ளார். இந்தூரில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரெட்டியின் அரைசதம் (53 ரன்கள்) மற்றும் மணிக்கு 135 கி.மீ வேகப்பந்துவீச்சை மேற்கோள் காட்டி, ஹர்திக் பாண்டியாவுக்கு சிறந்த மாற்று வீரராக அவர் இருப்பார் என்று இர்பான் பதான் தெரிவித்தார்.
நியூசிலாந்து ஒருநாள் தொடரின் ஆரம்பத்திலிருந்தே நிதிஷ் குமார் ரெட்டி அணிக்குள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என இர்ஃபான் பதான் கூறினார். ரெட்டியின் அதிரடி ஷாட்கள், பந்துவீச்சு வேகம் மற்றும் அவர் அமைத்த நல்ல பார்ட்னர்ஷிப்கள் , ஒரு முழுமையான ஆல்-ரவுண்டராக வளர வாய்ப்பு இருப்பதை காட்டியது.

இந்தூரில் நடந்த இறுதி ஒருநாள் போட்டியில் ரெட்டி 57 பந்துகளில் 53 ரன்கள் குவித்து, விராட் கோலியுடன் 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்ந்தார். "நிதிஷ் குமார் ரெட்டி ஒரு நேர்மறை ஆட்டம். பெரிய ஷாட்கள் மற்றும் ஸ்ட்ரைக் சுழற்றும் திறனை அவர் வெளிப்படுத்தினார்," என்று இர்ஃபான் பதான் தனது யூடியூப் சேனலில் கூறினார். நியூசிலாந்து 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது.
பதான் மேலும், "ரெட்டியின் 135 கி.மீ பந்துவீச்சு வேகம் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரர் ஆகும் திறனை உறுதிப்படுத்துகிறது. அவர் சோபிக்கத் தவறினாலும், நிர்வாகம் அவரைத் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும். இந்தியாவுக்கு ஒரு வலுவான ஆல்-ரவுண்டர் நிச்சயம் கிடைப்பார்," என்று நம்பிக்கை தெரிவித்தார்.
நிதிஷ் குமார் ரெட்டி 2024 இல் இந்திய டி20ஐ மற்றும் டெஸ்ட் அணிகளில் இணைந்தவர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டில் சதம் அடித்தார். அவர் 4 ஒருநாள் போட்டிகளில் ஒரு அரைசதத்துடன் 33.33 சராசரியில் 100 ரன்களும், 10 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதத்துடன் 26.40 சராசரியில் 396 ரன்களும், 8 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில், டேரில் மிட்செல் (137*) மற்றும் கிளென் பிலிப்ஸ் (106) ஆகியோரின் சதங்களால் நியூசிலாந்து 337/8 ரன்களைக் குவித்தது. ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா மூன்று விக்கெட்டுகள் எடுத்தனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் முதல் ஒருநாள் தொடர் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்தியாவின் விராட் கோலி சதம் அடித்தபோதிலும், தனது முதல் ஒருநாள் அரைசதம் அடித்த ஹர்ஷித் ராணாவுடன் அவர் அமைத்த 99 ரன்கள் கூட்டணி போதவில்லை. நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக 41 ரன்கள் வித்தியாசத்தில் தொடரைக் கைப்பற்றியது.