Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: பேட்டிங்கில் மீண்டும் கெத்து காட்டியது எப்படி? உண்மையை உடைத்த சிவம் துபே

விசாகப்பட்டினம்: நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில், இந்திய ஆல்ரவுண்டர் சிவம் தூபே 23 பந்துகளில் அதிரடியாக 65 ரன்கள் குவித்து அசத்தினார். விசாகப்பட்டினத்தில் நடந்த இந்தப் போட்டி, வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அடித்து நொறுக்கி, மீண்டும் தமது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார்.

தனது பேட்டிங் முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணமாக தனது மேம்பட்ட "மனநிலையை" சிவம் தூபே குறிப்பிட்டுள்ளார். இது தன்னை ஒரு "புத்திசாலி" கிரிக்கெட் வீரராக மாற்றியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். சுழற்பந்துவீச்சாளர் இஷ் சோதிக்கு எதிராக 29 ரன்கள் எடுத்தது மட்டுமல்லாமல், வேகப்பந்துவீச்சாளர்களான ஜேக்கப் டஃபி மற்றும் மாட் ஹென்றிக்கு எதிராக அவர் அடித்த மூன்று சிக்ஸர்கள் விளாசினார்.

இதன் மூலம் இந்திய அணியில் பேட்டிங் மேலும் பலமாக மாறி இருக்கிறது. போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய சிவம் தூபே, "நான் செய்யும் கடின உழைப்பும், வழக்கமான போட்டிகளில் விளையாடுவதும் எனது மனநிலையை மேம்படுத்தியுள்ளன. பந்துவீச்சாளர்களிடமிருந்து எதை எதிர்பார்ப்பது, எப்படிப் பதிலளிப்பது எனப் புரிகிறது" என்று தெரிவித்தார்.

இந்தத் தொடரில் தூபேவுக்குப் பந்துவீச்சிலும் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டன. இப்போட்டியில் இந்தியா தனது ஐந்து முக்கியப் பந்துவீச்சாளர்களை நம்பியதால், ஹர்திக் பாண்டியாவுக்கே வாய்ப்பு கிடைக்காத நிலையில், தூபேவுக்குப் பந்துவீசும் சந்தர்ப்பம் அமையவில்லை.வாய்ப்புகளுக்காகக் கவுதம் கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்குத் தூபே நன்றி தெரிவித்தார். "பந்துவீச்சு என்னை மேலும் புத்திசாலியாக்கியுள்ளது. நான் கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்வதில் பணியாற்றுகிறேன்" என்று அவர் குறிப்பிட்டார்.

"அனுபவம் முக்கியம், அது இப்போது பலன் தருகிறது. வீரர்கள் மற்றும் அணிகள் தொடர்ந்து தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்கின்றன, நான் ஒவ்வொரு ஆட்டத்திலும் புத்திசாலியாகவும், சிறப்பாகவும் இருக்கப் பாடுபடுகிறேன். சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் இருவரையும் திறம்பட எதிர்கொள்வது அவசியம். நடு ஓவர்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டைப் பராமரிப்பதே என் பணி. எனது பலத்தைப் புரிந்துகொண்டு, அதைச் சரியாகப் பயன்படுத்துவதே முக்கியம்" என்று அவர் விளக்கினார்.

யுவராஜ் சிங் (12), அபிஷேக் ஷர்மா மற்றும் காலின் மன்றோ (தலா 14) ஆகியோருக்குப் பிறகு, டி20 போட்டிகளில் இந்தியாவின் மூன்றாவது அதிவேக அரைசதமான தனது 15 பந்து அரைசதம் குறித்து பேசிய சிவம் தூபே "ஒரு பேட்ஸ்மேனாக, பந்துகளின் எண்ணிக்கையை நான் பெரிதாகக் கருதுவதில்லை. ஒவ்வொரு டெலிவரியையும் அதன் தகுதியின் அடிப்படையில் விளையாடுவதிலேயே கவனம் செலுத்துகிறேன்" என்றார்.

"நான் எனது திறன்களைக் கையாண்டு, மோசமான பந்துக்காகக் காத்திருந்தேன். சிறந்த பந்துவீச்சாளர்களாலும் அழுத்தத்தில் இருக்க முடியும் என்பதை நான் அறிவேன். ஆதிக்கம் செலுத்துவதே எனது நோக்கம், அதில் நான் வெற்றி பெற்றேன்" என்று தெரிவித்தார்.

Story first published: Thursday, January 29, 2026, 14:42 [IST]
Other articles published on Jan 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+