ஆறு தோல்விகள்
இந்திய அணி இதுவரை ஆறு உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணியை சந்தித்து, ஆறிலும் அந்த அணியை வீழ்த்தி உள்ளது. பாகிஸ்தான் அணியால் ஒருமுறை கூட உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்த முடியவில்லை.
விஸ்வரூபம்
இதனால், இந்த முறை பாகிஸ்தான் அணி இந்திய அணியை வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணியை எதிர் கொள்ள உள்ளது. அணிகளின் பலத்தை வைத்து ஒப்பிட்டால், பாகிஸ்தான் அணி திடீர் என விஸ்வரூபம் எடுப்பதும், திடீர் என அதிர்ச்சித் தோல்வி அடைவதுமாக உள்ளது.
இந்தியா வெல்லும்
மறுபுறம், இந்திய அணி திறன் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் வலுவான அணியாக காட்சி அளிக்கிறது. தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை அடுத்தடுத்த போட்டிகளில் வீழ்த்தி இருக்கிறது. எனவே, பாகிஸ்தான் அணி அந்த "திடீர் விஸ்வரூபம்" எடுக்காவிட்டால், இந்தியா எளிதாக வெல்லும் என்பதே விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
சேவாக் பேட்டி
இந்த நிலையில், ஷோயப் அக்தர் தன் யூட்யூப் சேனலில் இந்திய முன்னாள் வீரர் சேவாக்கை பேட்டி எடுத்தார். இருவரும் உலகக்கோப்பை குறித்தும், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் குறித்தும் பல கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
ஆதரவு யாருக்கு?
பின்னர், ஷோயப் அக்தர், "இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் டாஸ், வானிலை அனைத்தையும் கருத்தில் கொண்டால், எந்த அணிக்கு ஆதரவு அளிப்பீர்கள்?" என்று சேவாக்கிடம் கேட்டார். அதற்கு சேவாக் அதிரடி பதில் சொன்னார். இந்த கேள்விக்கு எப்படி அதிரடியாக பதில் சொல்ல முடியும்? ஆனால், சேவாக் கூறினார்.
அது நடக்காது
எந்த அணிக்கு ஆதரவு? என்ற கேள்விக்கு, "வரும் 16ஆம் தேதி பாகிஸ்தான் அணியால் எந்த வகையிலும் இந்திய அணியை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை" என்று ஒரே போடாக போட்டார். அக்தர் சுற்றி வளைத்து பாகிஸ்தான் அணி வெல்ல வாய்ப்புண்டு என சொல்ல வந்ததை புரிந்து கொண்ட சேவாக், நெத்தியடி அடித்தார்.
அக்தர் சப்பைக் கட்டு
அடுத்து பேசிய ஷோயப் அக்தர், பாகிஸ்தான் அணி டாஸ் வென்றால் நிச்சயம் போட்டியில் வெல்லும் என சப்பைக் கட்டு கட்டினார். சேவாக் ஆடுகளமாக இருந்தாலும் சரி, பேச்சாக இருந்தாலும் சரி, எப்போதும் அதிரடியாக நடந்து கொள்ளக் கூடியவர் என்பதை மீண்டும் நிரூபித்தார்.