கொழும்பு: இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வெளியே ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றதிலிருந்து பல்வேறு சர்ச்சைகளும் தேவையற்ற விவாதங்களும் இருந்து வருகிறது. அரசியல் நிகழ்வுகளை கிரிக்கெட் களத்தில் பாகிஸ்தான் பேசியதற்காக கடும் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவும், பாகிஸ்தானும் கொழும்புவில் பலப்பரிட்சை நடத்துகின்றன. இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான அணி 129 ரன்களில் சுருண்டது.

இதை அடுத்து களமிறங்கிய வங்கதேச அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டியின் போது கிரிக்கெட் வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் பாகிஸ்தான் அணி கேப்டன் சானா மிர் பேசிய ஒரு வார்த்தை தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவின் ஒரு அங்கமான காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வருகிறது. இதனை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று தான் இந்தியா அழைக்கும். ஆனால் இன்று பாகிஸ்தான் வீராங்கனை நட்டாலியா பெர்வைஸ் குறித்து பேசும்போது பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சானாமீர் முதலில் காஷ்மீரில் இருந்து வந்தவர் என்று கூறினார்.
அடுத்த சில நொடிகளிலே ஆசாத் காஷ்மீர் என்று தன்னை தானே திருத்திக் கொண்டார். இதுதான் தற்போது சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீரை ஆசாத் காஷ்மீர் என்று அவர் எப்படி கூறலாம் என்று தற்போது ரசிகர்கள் போர் கொடி தூக்கியுள்ளனர். இந்தியாவின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து செய்துவிட்டு ஆசாத் காஷ்மீர் என்று கூச்சமே இல்லாமல் உங்களால் எப்படி சொல்ல முடிகிறது.
ஆசாத் காஷ்மீர் என்று ஒரு பகுதியை இல்லை என்று இந்திய ரசிகர்கள் போர் கொடி தூக்கியுள்ளனர். ஜெயிஷா ஐசிசி தலைவராக இருக்கும்போதே அவர்களுக்காக பணி புரியும் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் இப்படி பேச எப்படி அனுமதி வழங்கப்பட்டது. இந்த காட்சி இந்தியாவில் எப்படி ஒளிபரப்பு செய்யப்பட்டது என்று பலரும் தங்களது எதிர்ப்புகளை கிளப்பி வருகின்றனர்.இதனால் கிரிக்கெட் வர்ணனை குழுவில் இருந்து சானா மீர் உள்ளிட்ட பாகிஸ்தான் வீராங்கனைகளை நீக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.