For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs PAK: "ஆட்டநாயகன்".. விருதை வாங்கிய பின் நோஸ் கட் செய்த விராட் கோலி.. என்ன சொன்னார்?

துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி சேஸிங்கில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

அப்போது வெளியில் விமர்சகர்கள் பேசுவதை கண்டு கொள்ளாமல், எனது சக்தி என்ன? என்பதை மட்டுமே நான் ஆடினேன் என்றும், அவர்களின் எதிர்பார்ப்புக்குள் சிக்கிக் கொள்வது எளிது. ஆனால், அணிக்காக ஆடுவது தான் எனது வேலை என விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்தார் கோலி.

IND vs PAK Virat Kohli Champions Trophy 2025 India 2025

ஆட்டநாயகன் விருதை வாங்கிய பின் விராட் கோலி பேசியது இங்கே - "ஒரு முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணியின் தகுதிச் சுற்றை (அரை இறுதி வாய்ப்பை) உறுதி செய்வதற்காக சிறப்பாக பேட் செய்ய முடிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரோஹித் விரைவில் ஆட்டமிழந்த நிலையில், போட்டியில் சிறப்பாக பங்களிக்க முடிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. கடைசி ஆட்டத்தில் நாங்கள் கற்றுக்கொண்டதைப் புரிந்து கொண்டு ஆட வேண்டியிருந்தது."

"எனது வேலை சுழற்பந்து வீச்சாளர்களை சமாளித்து ஆடுவது என்பதாக இருந்தது. இறுதியில் ஸ்ரேயாஸ் வேகமாக விளையாடினார். நானும் சில பவுண்டரிகள் அடித்தேன். இது எனது வழக்கமான ஒருநாள் போட்டி விளையாட்டை விளையாட அனுமதித்தது. எனது ஆட்டத்தைப் பற்றி எனக்கு நல்ல புரிதல் இருக்கிறது. விமர்சனங்களை விலக்கி வைத்து விட்டு, எனது இடத்தில் எனது சக்தி என்ன? எனது எண்ணம் என்ன? என்பதை பார்த்துக் கொள்வது முக்கியம். எதிர்பார்ப்புகளுக்குள் இழுக்கப்படுவது மிகவும் எளிதானது. எனது வேலை நிகழ்காலத்தில் தங்கி அணிக்காக ஆடுவது மட்டுமே."

"எனது முக்கிய குறிப்புகள் ஒவ்வொரு பந்திலும் 100% கொடுக்க வேண்டும், பின்னர் கடவுள் இறுதியில் உங்களுக்கு வெகுமதி அளிப்பார். ஆட்டத்தில் தெளிவு இருப்பது முக்கியம். பந்தில் வேகம் இருக்கும்போது ரன்கள் எடுக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். இல்லையெனில் சுழற்பந்து வீச்சாளர்களால் போட்டியை கட்டுப்படுத்த முடியும்.

"ஷாஹீனுக்கு எதிராக சுப்மன் கில் நன்றாக விளையாடினார், அவர் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பவர்ப்ளேவில் சுமார் 60-70 ரன்கள் எடுக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் நாங்கள் கடைசி வரை இந்தப் போட்டியை கொண்டு சென்று சேஸிங் செய்து இருப்போம். ஸ்ரேயாஸ் 4வது வரிசையில் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். இந்தியாவிலும் நன்றாக விளையாடினார், இப்போது இங்கேயும் நன்றாக விளையாடுகிறார்." இவ்வாறு விராட் கோலி பேசினார்.

Story first published: Sunday, February 23, 2025, 23:07 [IST]
Other articles published on Feb 23, 2025
English summary
IND vs PAK: Virat Kohli gave reply to Critics after 82nd International century
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+