
அபார தொடக்கம்
மாயங் அகர்வால் 60 ரன்களுக்கு ஆட்டமிழக்க, புஜாரா முதல் பந்திலேயே டக் அவுட்டானார். லுங்கி கிடி ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இந்தியாவுக்கு சற்று பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் விராட் கோலி பொறுப்புடன் விளையாடி 35 ரன்கள் சேர்த்த போது தேவையில்லாத ஷாட் ஆடி அவுட்டானார்.

ராகுல் சதம்
இதனைத் தொடர்ந்த கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்த ரஹானே, சற்று அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். இதனால் புது பந்தை தென்னாப்பிரிக்க அணி பயன்படுத்தியும் அது எந்த பயனும் அளிக்கவில்லை. சிறப்பாக விளையாடிய ராகுல் 7வது சதத்தை பூர்த்தி செய்தார். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. ரஹானே 40 ரன்களுடனும், ராகுல் 122 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

அடுத்தடுத்து விக்கெட்
இதனிடையே 2வது நாள் ஆட்டம் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் ஒரு பந்த கூட வீசப்படாத நிலையில், ஆட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எல். ராகுல் கூடுலாக 1 ரன் எடுத்து 123 ரன்களில் வெளியேற, நன்றாக விளையாடிய ரஹானேவும் மோசமான ஷாட் ஆடி 2 ரன்களில் அரைசதத்தை தவறவிட்டார்.

ஏமாற்றிய ரிஷப் பண்ட்
இந்திய அணியை சரிவிலிருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் அஸ்வின் (4), ரிஷப் பண்ட் (8) ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 272 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையிலிருந்து 296 ரன்களுக்கு 7 விக்கெட் என்று தடுமாறி வருகிறது. இந்திய அணி ஒரு 350 ரன்களை தொட்டால் மட்டுமே தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடி தர முடியும்


Click it and Unblock the Notifications











