
முதல் டி20
இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுவிட்ட நிலையில், கே.எல்.ராகுல் தலைமையில் புதிய படை உருவாக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் கலக்கிய இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதே போல ஹர்திக் பாண்ட்யா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் நீண்ட நாட்கள் கழித்து கம்பேக் தந்துள்ளனர்.

பிரமாண்ட சாதனை
இந்நிலையில் இந்த புதிய படை தான், தென்னாப்பிரிக்காவுடனான முதல் டி20 போட்டியில் பிரமாண்ட சாதனை படைக்கவுள்ளது. அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி கடைசியாக விளையாடிய 12 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை மட்டுமே கண்டுள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், சர்வதேச டி20ல் தொடர்ச்சியாக அதிக வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை படைக்கும்.

பங்கு போட்ட ஆஃப்கான்
கடந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானுடன் முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, அதன்பின்னர் ஸ்காட்லாந்து, நமிபியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை போன்ற அணிகளுடன் தொடர் வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற பட்டியலில் 12 வெற்றிகளுடன் ஆஃப்கானிஸ்தானை இந்தியா சமன் செய்துள்ளது. நாளை இது மாறுகிறது.

ப்ளேயிங் 11 கணிப்பு
இந்த பிரமாண்ட சாதனையை இந்திய அணி எந்த ப்ளேயிங் 11 உடன் படைக்கவுள்ளது என்ற கணிக்கப்பட்டுள்ளது.
கே.எல்.ராகுல், இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், அக்ஷர் பட்டேல், புவனேஷ்வர் குமார், யுவேந்திர சாஹல், உம்ரான் மாலிக்/ ஆவேஷ் கான்


Click it and Unblock the Notifications