
2 விக்கெட்டுகள்
இதனால் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இந்திய அணி வீரர்களும் மளமளவென விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தென்னாப்பிரிக்க அணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக 36வது ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 74 ரன்கள் எடுத்து இருந்தது.

ரோலரின் பங்கு
இந்திய வீரர்கள் பேட்டிங் செய்யும் போது கடினமாக இருந்த ஆடுகளம் தற்போது எப்படி மாறியது என்று ரசிகர்கள் குழம்பினர். அதற்கு காரணம் இது தான். ஒவ்வொரு இன்னிங்ஸ் முடிந்தவுடனும், பேட்டிங் செய்ய உள்ள அணியிடம் எந்த ரோலரை ( பிட்சை சமம்படுத்த பயன்படும் இயந்திரம்) பயன்படுத்தலாம் என்று கேட்கப்படும்.அதற்கு கேப்டன்கள் சூழலுக்கு தகுந்தால் போல்பெரிய ரோலர், சின்ன ரோலரை தேர்வு செய்வார்கள்

பெரிய ரோலர்
பெரிய ரோலரை பயன்படுத்தினால், ஆடுகளம் நன்கு சமமமாக (Hard) மாறும். சின்ன ரோலர் ஆடுகளத்தை கொஞ்சம் Soft ஆக மாற்றும். ஆடுகளம் Hard ஆக இருந்தால் சில சமயம் பேட்டிங்கிற்கு சாதகமாக செயல்படும். சில சமயம் பந்து நன்காக பவுன்சாகும். பந்து வேகமாக பேட்டிற்கு வந்தால், அது பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க வாய்ப்பாக அமையும்.

எல்கார் முடிவு
இதனால் தென்னாப்பிரிக்க கேப்டன் டின் எல்கார் பெரிய ரோலரை பயன்படுத்தினார். ஆடுகளம் சில இடங்களில் Crack இருந்தது. இது பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை தரும். இதனால் ஆடுகளத்தை சமமாக ஹார்டாக மாற்ற அவர் பெரிய ரோலரை பயன்படுத்தினார்

ஈரப்பதம்
மேலும் சூரியனும் நேரடியாக ஆடுகளத்தில் பட, அதில் இருந்த ஈரப்பதம் முற்றிலுமாக காய்ந்துவிடும். இதனால், வேகப்பந்தவீச்சுக்கு சற்று தொய்வு ஏற்படலாம். ஆனால் இத்தகைய நேரத்தில் தான் சுழற்பந்துவீச்சாளர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த சரியான நேரம். இதனால் அஸ்வினின் பங்கு 2வது இன்னிங்சில் மிகவும் முக்கியம்.


Click it and Unblock the Notifications











