கெப்பேஹா : இந்தியா,தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று கெப்பேஹா நகரில் தொடங்கியது. இன்றைய ஆட்டத்தில் மழை பெய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஆடுகளத்தில் புற்களும் அதிக அளவில் இருக்கிறது.
இதனால் இந்த ஆடுகளம் வேகபந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இந்த நிலையில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது. இது இந்தியாவுக்கு பாதகமான முடிவாக பார்க்கப்படுகிறது.
