
டக் அவுட்
3வது விக்கெட்டுக்கு ரஹானே, புஜாரா ஜோடி 114 ரன்கள் சேர்த்து, இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். புஜாரா இந்தியாவுக்கு வெளியே அதிவேக அரைசதம் இன்றைய போட்டியில் விளாசினார். இந்த ஜோடி சென்றதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் டக் அவுட்டாகி வெளியேறினார்,முதல் இன்னிங்சில் இந்திய அணியை காப்பாற்றிய அஸ்வின், 2வது இன்னிங்சிலும் ரன் அடிக்க முயற்சித்தார்.

அடுத்தடுத்து விக்கெட்
ஆனால் 16 ரன்களில் அவர் வெளியேறினார்.இதனால் மதிய நேர உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்துள்ளது,சிறப்பாக பந்துவீசிய ரபாடா 3 விக்கெட்டுகளையும், லுங்கி கிடி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.இதே போன்று 2018ஆம் ஆண்டு ஜோகனஸ்பர்கில் இந்தியா விளையாடியது. அப்போது இந்திய அணி முதல் இன்னிங்சில் 187 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 194 ரன்களும் எடுத்தது

2018 டெஸ்ட்
7 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி 2வது இன்னிங்சில் 247 ரன்கள் சேர்த்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 177 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவியது.தற்போது 2022ஆம் ஆண்டு ஜோகனஸ்பர்க் டெஸ்டும் அதே நிலையில் தான் இருக்கிறது. இந்தியா எப்படியாவது 250 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.
Recommended Video

என்ன செய்யனும்?
அப்போது தான் வெற்றி கிடைக்கும். இல்லையேனில் தென்னாப்பிரிக்கா போட்டியை வென்று தொடரை சமன் செய்துவிடும். 2013ஆம் ஆண்டு இதே மைதானத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. அப்போது தென்னாப்பிரிக்க அணிக்கு 458 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 450 ரன்கள் எடுக்க, ஆட்டம் டிராவில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











