For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிஷப் பண்ட் செய்த ஏமாற்று வேலை..!! இந்தியாவுக்கு கலங்கம்.. தென்னாப்பிரிக்கா பகீர் புகார்..

ஜோகனஸ்பர்க்: இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 50 ரன்கள் எடுத்தார்

நட்சத்திர வீரர்கள் ரஹானே, புஜாரா ஆகியோர் சொதப்பிய நிலையில், தமிழக வீரர் அஸ்வின் 45 ரன்கள் விளாசினார்

சிறப்பான தொடக்கம்

சிறப்பான தொடக்கம்

இதனையடுத்து 35 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற ஸ்கோருடன் தென்னாப்பிரிக்க அணி 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. தென்னாப்பிரிக்க அணியின் இளம் வீரர் பீட்டர்சன், எல்காருடன் ஜோடி சேர்த்து 2வது விக்கெட்டுக்கு 74 ரன்களை சேர்த்தனர். கேப்டன் டீன் எல்கார் 28 ரன்களில் ஆட்டமிழந்தார், சிறப்பாக விளையாடிய பீட்டர்சன் 62 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்

ஆட்டமிழப்பு

ஆட்டமிழப்பு

ரசிகர்களால் லார்ட் என்று அழைக்கப்படும் ஷர்துல் தாக்கூர், அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்த தென்னாப்பிரிக்காவுக்கு லேசான சரிவை கண்டது. இதில் வெண்டர் டுசன் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு நமது ரிஷப் பண்ட் செய்த ஏமாற்று வேலை தான் காரணம். வெண்டர்டுசன் அடித்த பந்தை ரிஷப் பண்ட் பிடித்துவிட்டதாக கூறி, அவுட் கேட்டார்

ஏமாற்றிய ரிஷப் பண்ட்

ஏமாற்றிய ரிஷப் பண்ட்

அதற்கு நடுவரும் அவுட் வழங்கிவிட்டார். வெண்டர்டுசனும் ரிவியூ கேட்காமல் பெவிலியன் நோக்கி செல்ல, மதிய உணவுக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது வெண்டர் டுசன் விக்கெட்டை ரீப்ளே செய்து பார்த்த போது, கீழே விழுந்த பந்தை ரிஷப் பந்த் கேட்ச் பிடித்துவிட்டதாக கூறியது தெரியவந்தது.எனினும் வெண்டர் டுசன் களத்தை விட்டு சென்றுவிட்டதால் அவர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார்

தவறை திருத்தவில்லை

தவறை திருத்தவில்லை

இந்த காட்சியை பார்த்து விட்டு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வர்ணனையாளர்கள் ரிஷப் பண்டுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால் கவாஸ்கர், வெண்டர் டுசன் களத்திலேயே நின்று ரிவியூ கேட்காமல் சென்றது அவரது தப்புதான் என்று கூறினார். இந்தியா தவறு செய்ததால், வெண்டர் டுசனை மீண்டும் பேட்டிங் செய்ய அழைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நடைபெறவில்லை.

Story first published: Tuesday, January 4, 2022, 17:43 [IST]
Other articles published on Jan 4, 2022
English summary
Ind vs SA 2nd Test Rishabh pant created big controversy by appealing for catch ரிஷப் பண்ட் செய்த ஏமாற்று வேலை..!! இந்தியாவுக்கு கலங்கம்.. தென்னாப்பிரிக்கா பகீர் புகார்..
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+