
முக்கியமான ஆட்டம்
முதல் 8 இடங்களை பிடிக்கும் அணியே, நேரடியாக அடுத்த ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். இதனால், தென்னாப்பிரிக்க அணி தகுதி சுற்றில் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இன்றைய வெற்றி தென்னாப்பிரிக்கா அணிக்கு மிகவும் முக்கியம் என கருதப்படுகிறது.

ஆடுகளம்
இந்த நிலையில், டெல்லியில் இன்று காலை வரை கன மழை பெய்தது. இதனால், அருண் ஜெட்லி மைதானம் ஈரப்பதத்துடன் காட்சி அளிக்கிறது. மைதானத்தில் ஆங்காங்கே இருக்கும் நீரை வெளியேற்றும் முயற்சியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் டாஸ் மதியம் 1.40 மணிக்கு தான் வீசப்பட்டது.

டாஸ் முக்கியம்
இதனிடையே, மைதானம் சிறிய அளவு என்பதால், சிக்சர்கள், பவுண்டரிகள் அதிக அளவு செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீசினார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் தென்னாப்பரிக்கா அணியில் ஒரே தொடரில் 3வது முறையாக கேப்டன் மாற்றப்பட்டார்.

கேப்டன் மாற்றம்
முதல் போட்டியில் பெவுமா, இரண்டாவது போட்டியில் கேசவ் மகாராஜ் என கேப்டன்கள் மாறிய நிலையில், தற்போது டேவிட் மில்லர், 3வது முறை கேப்டனாக மாற்றப்பட்டுளளார். கேசவ் மகாராஜ் இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை. தென்னாப்பிரிக்க அணியில் ஆண்டிரிச் நோக்கியா, ஆண்டில் பெலுக்வாயோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications











