
பும்ராவின் அதிர்ச்சி
இதனையடுத்து, 17 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற ஸ்கோருடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை தென்னாப்பிரிக்க தொடர்ந்தது. இன்றைய ஆட்டத்தின் 2வது பந்திலேயே பும்ரா வீசிய பந்தை சரியாக கணிக்க தவறியதால் ஏய்டன் மார்க்ரம் போல்ட் ஆனார். நைட் வாட்ச்மேனாக இருந்த கேஷவ் மகாராஜ், பொறுமையாக விளையாடி 25 ரன்கள் சேர்த்தார்

கோலிக்கு சோதனை
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த வெண்டர் டுசன் மற்றும் பீட்டசர்சன் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஆனால் அவர்களுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக இந்திய வீரர்கள் பந்துவீசினர். இதன் பலனாக பேட்டில் பந்து எட்ஜ் ஆகியும், சிலிப்பில் நிற்கும் ஃபில்டர்களுக்கு முன்பே பந்து தரையில் பட்டது. இது என்ன டா, நமக்கு வந்த சோதனை என்று விராட் கோலியும், பந்துவீச்சாளர்களும் கடுப்பாகினர்

என்ன காரணம்
நேற்றைய தினத்தை காட்டிலும் இன்று மேகமூட்டம் இல்லாமல் சூரியன் சுட்டெரித்தது. இதனால் ஆடுகளம் கொஞ்சம் தொய்வாக செயல்படுவதால், பேட்ஸ்மேன்களுக்கு ரன் குவிக்க ஏதுவாக இருக்கிறது. மேலும் பந்துவீச்சாளர்கள் 140 கிலோ மீட்டர் வேகத்துக்கு வீசினால் மட்டுமே பேட் எட்ஜில் பட்டு, சில்ப்பில் நிற்கும் ஃபில்டர்கள் கைக்கு பந்து செல்லும். ஆனால் ஷர்துல் தாக்கூர் 130 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதால் அவருக்கு விக்கெட் கிடைக்காமல் இருந்தது.
Recommended Video

உமேஷ் யாதவ்
இதனை பயன்படுத்தி 4வது விக்கெட்டுக்கு பீட்டர்சன், வெண்டர்டுசன் ஜோடி 67 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து உமேஷ் யாதவை பந்துவீச விராட் கோலி அழைத்தார். அவர் வேகமாக பந்துவீச, வெண்டர் டுசன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பீட்டர்சன் அரைசதம் கடந்தார்.


Click it and Unblock the Notifications











