ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இந்திய அணியில் உள்ள ஒரே இடதுகை வேகப்பந்துவீச்சாளர் என்றால் அது அர்ஷ்தீப் சிங். அண்மை காலமாக நோ-பால் பிரச்சனையால் தவித்து வந்த அர்ஷ்தீப் சிங், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து வந்தார். உலகக்கோப்பை தொடருக்கு பின் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார்.
