For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SA: இந்திய அணி செய்தது முட்டாள்தனமானது.. 8வது இடத்தில் ரிங்கு சிங் என்ன செய்வார்? அஸ்வின் கேள்வி

மும்பை: டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், அணி நிர்வாகத்தை அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார். , அணியில் வீரர்களின் தேர்வு மற்றும் பேட்டிங் வரிசையை அஸ்வின் குறை கூறினார். அதிக அழுத்தமான சூழ்நிலைகளுக்கு அணி தயாராக இல்லை என்பதை இத்தோல்வி வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

இந்தியா எட்டு அங்கீகரிக்கப்பட்ட பேட்ஸ்மேன்களுடன் விளையாடிய போதிலும், ரிங்கு சிங்கை எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்பிய முடிவை அஸ்வின் கேள்வி எழுப்பினார். இது சரியான முடிவு அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "உங்களிடம் எட்டு பேட்ஸ்மேன்கள் இருந்து, அவர்களில் ஒருவர் ரிங்கு சிங் என்றால், அவர் எட்டாவது இடத்தில் இறங்க முடியாது. சுந்தரை அவமதிக்க விரும்பவில்லை. அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். அவரது பேட்டிங் திறன்கள் எங்களுக்குத் தெரியும்."

"இதுபோன்ற ஆட்டங்களுக்கு நீங்கள் தயாராக இல்லாமல் வரக்கூடாது என்று தென்னாப்பிரிக்கா எங்களுக்கு ஒரு பாடம் புகட்டியுள்ளது. நமது அணி தயாராக இருக்கவில்லை," என்று அஷ்வின் குறிப்பிட்டார். இது வாஷிங்டன் சுந்தரை நோக்கிய விமர்சனம் அல்ல, என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

"ரிங்கு சிங் ஐந்தாவது இடத்தில் இறங்குவதைப் பார்க்க நான் விரும்பியிருப்பேன். அக்ஸருக்குப் பதிலாக வாஷிங்டனை அதே போன்ற மாற்று வீரராகப் பார்ப்பதாக நினைக்கிறேன். ஆனால் அனுபவத்திற்கு ஒரு மதிப்பு உண்டு, அந்த இடத்தில் ஏற்கனவே அதைச் செய்த ஒருவர் அக்ஸர் தான்."

"அக்ஸர் அங்கு இருந்தவர், அழுத்தத்தைக் கையாண்டவர், அதைச் செய்தவர். இவ்வளவு அதிக அழுத்தமான ஆட்டத்தில் ஐந்தாவது இடம் வாஷிக்கு அதிகம். ரிங்கு எட்டாவது இடத்தில் இருந்தபோது, ஆட்டம் ஏற்கனவே முடிந்துவிட்டது. அவர் வந்து அங்கு பேட்டிங் செய்வதால் எந்தப் பயனும் இல்லை. ஒரு சிறிய அடியை ஏற்றுக்கொண்டோம்."

"நாம் கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். இனிவரும் போட்டிகளில், பெரும்பாலான அணிகள் இந்தியாவை சேஸிங் செய்ய சொல்வார்கள். அணிகள் நன்கு திட்டமிட்டு வந்தால் அதுவே மிகப்பெரிய சவாலாக இருக்கும்," என்று அஷ்வின் வலியுறுத்தினார்.தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 76 ரன்கள் தோல்வி, அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கான இந்தியாவின் வாய்ப்புகளை பாதித்துள்ளது. டி20 உலகக் கோப்பைப் பட்டத்தைத் தக்கவைக்க இந்திய அணி மீதமுள்ள இரண்டு ஆட்டங்களையும் நல்ல நிகர ரன் ரேட்டுடன் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Story first published: Monday, February 23, 2026, 17:06 [IST]
Other articles published on Feb 23, 2026
English summary
Former India off-spinner Ashwin criticises team selection and batting order following a 76-run defeat by South Africa in the T20 World Cup, stressing focus on preparation, planning, and handling pressure in future matches.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+