முக்கிய விக்கெட்கள்
பும்ரா எடுத்த இந்த 2 விக்கெட்களால் தென்னாப்பிரிக்கா முதலில் ஆட்டம் கண்டாலும், பாப் டு ப்ளேசிஸ் - டஸ்ஸன் இணைந்து அணியை மீட்டனர். அப்போது 20வது ஓவரை வீசிய சாஹல், அவர்கள் இருவரையும் தன் லெக் ஸ்பின்னால் திணற வைத்து பௌல்டு அவுட் முறையில் வெளியேற்றினார்.
அழுத்தம்
இந்த இரு விக்கெட்களை அடுத்து தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 80 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து கடும் அழுத்தத்தில் சிக்கியது. அதன் பின்னும் விடாத சாஹல், டேவிட் மில்லர், பெஹ்ளுக்வாயோ ஆகியோரது விக்கெட்களையும் வீழ்த்தினார்.
ஆட்டிப் படைத்தார்
சாஹல் மொத்தமாக 4 விக்கெட்கள் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணியை ஆட்டிப் படைத்தார். தான் வீசிய 10 ஓவர்களில் 51 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார் சாஹல். மறுபுறம், பும்ரா ரன்களைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டார்.
சிக்கனம்
பும்ரா கடைசியாக வீசிய சில ஓவர்கள் தவிர்த்து மற்ற ஓவர்களில் எல்லாம் கடும் சிக்கனம் காட்டினார். 10 ஓவர்களில் 35 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார் அவர். ஒரு மெய்டன் ஓவரும் வீசி இருந்தார்.
பின் வரிசை பேட்டிங்
பும்ரா, சாஹல் தென்னாப்பிரிக்கா அணியின் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை காலி செய்த பின், அந்த அணியின் பின் வரிசை வீரர்கள் பெஹ்ளுக்வாயோ 34, கிறிஸ் மோரிஸ் 42, ரபாடா 31 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் 200ஐ கடக்க உதவினர்.
ரோஹித் சதம்
தென்னாப்பிரிக்கா அணி 227 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 47.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. ரோஹித் சர்மா 122 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.