சென்சுரியன்: சென்சுரியன் ஆடுகளத்தில் சேர்க்கப்படும் ஒவ்வொரு ரன்னும் தங்கத்திற்கு ஈடானது என்றும், இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுமையாக பேட்டிங் செய்தால் மட்டுமே ரன்கள் சேர்க்க முடியும் என்றும் டூ பிளசிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. 1992ஆம் ஆண்டு முதல் 8 முறை தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இதுவரை ஒரு முறை வென்றதில்லை. அதில் 7 முறை தென்னாப்பிரிக்கா அணியே வென்றுள்ளது. இதற்கு இந்திய அணி பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டமே காரணமாக அமையும்.
