For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SA: என் வாழ்க்கையிலே நான் பணியாற்றியதில் கம்பீர் தான் சிறந்த பயிற்சியாளர்.. ஆப்கான் வீரர் புகழாரம்

மும்பை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ரஹ்மனுல்லா குர்பாஸ், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல பயிற்சியாளர்களுடன் பணியாற்றியிருந்தாலும், கௌதம் கம்பீரே சிறந்தவர் எனக் கூறியுள்ளார். 2024 ஐபிஎல் பட்டத்தை வென்ற கேகேஆர் அணிக்கு கம்பீர் மெண்டராக இருந்தார். அப்போது, சிறந்த அணி சூழலை உருவாக்கியதற்காக குர்பாஸ் கம்பீரைப் பாராட்டினார்.

ஃபில் சால்ட் வெளியேறிய பிறகு, கேகேஆரின் வெற்றிக்கு குர்பாஸ் முக்கியப் பங்காற்றினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான குவாலிஃபையர் 1 மற்றும் இறுதிப் போட்டியில் ரன்களைக் குவித்து, அணியின் மூன்றாவது ஐபிஎல் பட்டத்திற்கு உதவினார்.

Gambhir

இது குறித்து பேசிய குர்பாஸ், "என் வாழ்க்கையில் நான் கண்ட சிறந்த பயிற்சியாளர், மனிதர், வழிகாட்டி என்றால் அது கம்பீர் தான். அவர் செயல்படும் விதத்தை நான் விரும்புகிறேன். நல்ல அணிச் சூழல் எப்போதும் உங்களை உச்சத்தில் வைக்கும். அவர் எளிதான, அழுத்தமற்ற சூழலை உருவாக்கினார்."

"அதனால்தான் வென்றோம். அவர் கண்டிப்பானவர் இல்லை, ஆனால் ஒழுக்கத்தில் உறுதியானவர். ஒழுக்கத்திற்கு மாறாக எது நடந்தாலும் மட்டுமே கண்டிப்பை காட்டுவார்" என்றும் அவர் விளக்கினார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதால் கேகேஆர் அணியிலிருந்து கம்பீர் விடுவிக்கப்பட்டார். ரஹ்மனுல்லா குர்பாஸ் ஐபிஎல் 2025ல் கேகேஆர் அணிக்காக விளையாடியிருந்தாலும், 2026 மினி ஏலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்பட்டார்.

கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி 0-2 என டெஸ்ட் தொடரை இழந்ததால், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் விமர்சனங்களுக்கு உள்ளானார். கடந்த 12 மாதங்களில் இழந்த இரண்டாவது தொடர் இதுவாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் அணியின் நிலையையும் பாதித்தது. தற்போது பாகிஸ்தானுக்கு கீழே இந்தியா சென்றுள்ளது.

இதற்கு பதில் அளித்த அவர், "1.4 பில்லியன் பேர் உள்ள நாட்டில், 2-3 மில்லியன் பேர் அவருக்கு எதிராக இருக்க வாய்ப்புள்ளது. மற்றவர்கள் கம்பீர் மற்றும் இந்திய அணியுடனே இருக்கிறார்கள். அப்படியானவர்களைப் பற்றிப் பேசுவது பயனற்றது. இந்தியா சமீபத்தில் ஒருநாள் சாம்பியன்ஸ் கோப்பையையும், டி20 ஆசியக் கோப்பையையும் வென்றது."

"பல தொடர்களை வென்றிருப்பதால், ஒரு தொடர் தோல்விக்காக அவர்களைக் குறை கூறுவது நியாயமில்லை" என்றும் குர்பாஸ் சுட்டிக்காட்டினார்.
ராஞ்சியில் நவம்பர் 30 அன்று முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி வெற்றிப் பாதைக்கு திரும்பியது. 2வது ஒருநாள் போட்டி புதன்கிழமை ராய்ப்பூரில் நடைபெறுகிறது.

Story first published: Tuesday, December 2, 2025, 13:33 [IST]
Other articles published on Dec 2, 2025
English summary
Ind vs sa- Gambhir is the best coach i Have ever Worked With says Gurbaz
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+