மும்பை: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடக்கவுள்ளது. கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு பின் இந்திய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளதால், இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தோல்விக்கு பின், நட்சத்திர வீரர்கள் அனைவரும் ஒரு மாத ஓய்வுக்கு பின் களம் திரும்புகின்றனர்.
