
முதல் டெஸ்ட் போட்டி
இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக இவர்கள் இருவருக்கும் பிசிசிஐ-யிடம் இருந்து அவசர கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் நன்றாக ஆடியே தீர வேண்டும் என உத்தரவிடப்பட்டதாக தெரிகிறது. ஏனென்றால் நன்றாக விளையாடக்கூடிய ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி ஆகியோரை வெளியேற்றிவிட்டு, இவர்களுக்கு வாய்ப்பளித்தது. இதனையடுத்து ரகானே ஓரளவிற்கு சிறப்பாக விளையாடி தப்பித்துவிட்ட நிலையில் சட்டீஸ்வர் புஜாரா மீண்டும் ஒருமுறை ஏமாற்றினார்.

சோகமான சாதனை
ஓப்பனர்கள் 117 ரன்கள் சேர்த்த நிலையில் முதல் முதல் விக்கெட்டிற்கு புஜாரா களமிறங்கினார். அப்போது, தான் எதிர்கொண்ட முதல் பந்திலே அழகாக ஷாட் லேக்கில் நின்றவரிடம் கேட்ச் கொடுத்து கோல்டன் டக்காகி பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணி வரலாற்றில் , முதல் விக்கெட்டிற்கு களமிறங்கி அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற சோகமான சாதனையை புஜாரா படைத்தார்.
Recommended Video

புஜாரா மீதான நம்பிக்கை
சட்டீஸ்வர் புஜாராவை அணியில் இருந்து நீக்கும் முடிவில் பிசிசிஐ இருந்துள்ளது. ஆனால் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட், சண்டைப்போட்டு அவரை தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச்சென்றார். மேலும் முதல் டெஸ்டிலேயே அவருக்கு ப்ளேயிங் 11லும் வாய்ப்பு கொடுத்தார். இப்படி அதீத நம்பிக்கை வைத்தவர், புஜாரா டக் அவுட் ஆனவுடன் என்ன செய்தார் தெரியுமா?

டிராவிட்டின் பதில்
அவுட்டான பிறகு நேரடியாக ஓய்வறைக்கு சென்ற புஜாரா உடைகளை மாற்றிக்கொண்டு வெளியே வந்தார். அப்போது அவருக்கு எதிரே சென்ற ராகுல் டிராவிட் எதையும் அவரிடம் அதிகம் பேச விரும்பவில்லை. அதிருப்தியில் இருந்தவாறு, தோழில் தட்டிக்கொடுத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார். அதன் பின்னர் புஜாராவும் வருத்தமாக நின்றுக்கொண்டிருந்த காட்சிகளும் வீடியோவாக பதிவாகியுள்ளது. இதனை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications