For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SA : ஒரே அணுகுமுறை, ஒரே ஸ்டைல்.. டெஸ்ட் கிரிக்கெட் இதுதான் பாலிசி.. யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

மும்பை: தன்னிடம் அட்டாக்கிங் அணுகுமுறை மட்டுமே இருப்பதாகவும், தேவைக்கேற்ப ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ப மாற்றி விளையாடுவேன் என்றும் இந்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி முதல்முறையாக கேப் டவுன் மைதானத்தில் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது.

IND vs SA : I only have attacking game and if team demands i will bat differently says Yashasvi Jaiswal

அதேபோல் தோனிக்கு பின் முதல் முறையாக ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா என்று பாதி அணியில் ஆடிய வீரர்கள் தென்னாப்பிரிக்கா மண்ணில் முதல்முறையாக விளையாடியவர்கள்.

இவர்களை கொண்டு இந்திய அணி டெஸ்ட் தொடரை சமன் செய்திருப்பது கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த 2 போட்டிகளிலும் சேர்த்து 4 இன்னிங்ஸ்களில் பேட் செய்துள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் மொத்தமாக 50 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அறிமுக போட்டியிலே சதம் விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்த தொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

இருப்பினும் 2வது டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் எந்த பயமும் இல்லாமல் அதிரடியில் பட்டையை கிளப்பினார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். தென்னாப்பிரிக்கா மண்ணில் முதல்முறையாக விளையாடியது குறித்து ஜெய்ஸ்வால் பேசுகையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தான் நான் நல்ல மனநிலையுடன் விளையாடியதற்கு உதவியாக இருந்தார். கடைசி இன்னிங்ஸில் அதிரடியாக ரன்களை சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

எப்போதும் சிறந்த தொடக்கம் கொடுக்க வேண்டும் என்பதே எண்ணமாக இருக்கும். கடந்த 3 இன்னிங்ஸ் மட்டுமல்லாமல், 4வது இன்னிங்ஸிலும் ஏதோ ஒன்றில் சிறப்பாக செயல்பட்டுள்ளேன் என்று நினைக்கிறேன். இந்த சுற்றுப்பயணம் நிச்சயம் கற்றலுக்கான பயணமாக அமைந்தது. வேறு சூழலில் விளையாடுவது வித்தியாசமான உணர்வை அளித்தது. எங்கெல்லாம் முன்னேற வேண்டிய தேவை இருக்கிறது என்பதை அறிந்துள்ளேன். தென்னாப்பிரிக்கா மண்ணில் பந்து வித்தியாசமாக வருகிறது. எல்லாவற்றையும் கொடுக்க தயாராக இருந்தேன்.

நிச்சயம் சவால் நிறைந்ததாக இருந்தது. அடுத்தடுத்து வெளிநாடுகளில் சந்திக்க போகும் சவால்கள் பற்றி அறிமுகத்தை அளித்தது. அடுத்தடுத்த தொடர்களில் நிச்சயம் முன்னேற்றம் காண்பேன். எனக்கென்று எந்த ஸ்டைலும் கிடையாது. என்னிடம் அட்டாக்கிங் கிரிக்கெட் மட்டுமே உள்ளது. சூழலுக்கு ஏற்ப அணி நிர்வாகத்தின் முடிவின் படி அணுகுமுறையை மாற்றி கொள்வேன். டெஸ்ட் போட்டியின் முதல் நாள் என்றால் வேறு மாதிரி பேட்டிங் செய்வேன். ஒருவேளை 4வது இன்னிங்ஸ் என்றால் வேறு மாதிரி விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, January 5, 2024, 23:30 [IST]
Other articles published on Jan 5, 2024
English summary
IND vs SA : I only have attacking game and if team demands i will bat differently says Yashasvi Jaiswal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+