டர்பன் : தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் முதல் டி20 போட்டி வரும் பத்தாம் தேதி தொடங்குகிறது.
இதற்காக இந்திய அணி வீரர்கள் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு சென்றிருக்கிறார்கள். இதற்காக இந்திய அணி வீரர்கள் முதலில் டர்பன் வந்து அடைந்தார்கள். அப்போது விமான நிலையத்தில் வீரர்களின் உடைமைகளை எடுத்துச் செல்ல எந்த ஆட்களும் வரவில்லை.

வீரர்களுக்கு இந்திய முறைப்படி ஹோட்டல் ஊழியர்கள் வரவேற்பை கொடுத்தார்கள். முதல் டி20 போட்டி வரும் பத்தாம் தேதி நடைபெறுகிறது. இந்த டி20 தொடர் 14ஆம் தேதி முடிவடைகிறது. 17-ஆம் தேதி ஒரு நாள் தொடர் தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு 26 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற உள்ளது. இரண்டாம் டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி கேப் டவுனில் நடைபெறுகிறது.