சென்சுரியன்: உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்வியில் இருந்து இந்திய அணி வீரர்கள் மீண்டு வந்துவிட்டதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியை ஏற்று கொள்ள முடியாமல் விராட் கோலி, ரோகித் சர்மா, முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர் சிந்தினர். இதனால் உலகக்கோப்பை தோல்வியில் இருந்து இந்திய அணி வெளி வருவதற்கு சில மாதங்கள் பிடிக்கும் என்று பார்க்கப்பட்டது.
