For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SA: உலக கிரிக்கெட்டில் யாரும் செய்யாததை சூர்யகுமார் பண்ணிருக்கார்.. இர்பான் பதான் பாராட்டு

மும்பை: இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவின் கேப்டன்ஷி திறன் உரிய பாராட்டுகளைப் பெறுவதில்லை என முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான், கருத்து தெரிவித்துள்ளார். மிகச் சில கேப்டன்களே சூர்யகுமார் போன்று உயர்ந்த வெற்றி சதவீதத்தைக் கொண்டுள்ளனர். சமீபத்தில், இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடரின் நான்காவது T20I, டிசம்பர் 17 அன்று லக்னோவில் பனிப்பொழிவால் ரத்தானது.

இதனால் சூர்யகுமார் தலைமையில், இந்தியா T20I தொடர்களில் தோல்வியடையாத பயணத்தைத் தொடர்ந்தது.ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விவாதம் ஒன்றில் பேசிய பதான், "நாம் சூர்யகுமார் யாதவின் கேப்டன்சியை உரிய அளவு கொண்டாடுவதில்லை. அவரது பேட்டிங்கை அதிகம் கொண்டாடியுள்ளோம். தற்போது ஃபார்ம் இன்றி இருந்தாலும், கேப்டன்சியில் அவரது 83% வெற்றி மிகவும் சிறப்பானது," என்று தெரிவித்தார்.

மேலும், "அனைத்து டி20 கேப்டன்களாலும் இதைச் செய்ய முடியாது. தென்னாப்பிரிக்கா இந்தத் தொடரில் அழுத்தம் கொடுத்த போதும், இந்திய அணி மீண்டு வந்து வெற்றி பெற்றது. சூர்யகுமாருக்கு வாழ்த்துகள்" என்று அவர் பாராட்டினார்.இர்ஃபான் பதான், சூர்யகுமார் யாதவை ஒரு பந்துவீச்சாளர்களின் கேப்டன் என புகழ்ந்துள்ளார்.

அவரது தலைமையில் இந்திய அணியில் சிறந்த டிரஸ்ஸிங் ரூம் சூழல் நிலவுவதாகவும், முழு அணியும் ஒன்றாக திரைப்படங்கள் பார்க்கவோ அல்லது பெயிண்ட்பால் விளையாடவோ செல்வதாகவும் இர்ஃபான் பதான் விளக்கினார்.தற்போது இந்திய அணி 2-1 எனத் தொடரில் முன்னிலை வகிக்க, இறுதிப் போட்டி டிசம்பர் 19 அன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதே விவாதத்தில், சூர்யகுமார் யாதவின் பேட்டிங் ஃபார்ம் சரிவு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. 2025 ஆம் ஆண்டில் அவர் எந்த ஒரு டி20 அரை சதமும் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யகுமாரின் பேட்டிங் குறித்து பேசிய இர்பான் பதான், "வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கால்களை அதிகம் அசைப்பதில்லை. அணிகள் அவரைப் பற்றி ஆராய்ந்து, ஒரே வேகத்தில் பந்துவீசாமல், மெதுவான பந்துகளைப் பயன்படுத்துகின்றன. எனவே, அவர் இதை திறம்பட எதிர்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, அவர் தனது விருப்பமான ஷாட்களை மிகவும் விரைவாகவும், அதிகமாகவும் விளையாடுகிறார். தனது விருப்பமான ஷாட்களை அடிக்கும் முன் இன்னும் சிறிது காலம் காத்திருக்க முடியுமா?

சிறிது நேரம் நேராக விளையாடுங்கள். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கால்களை முன்னோக்கி எடுத்துச் செல்லுமாறு நீங்கள் கேட்கலாம். இத்தனை ஆண்டுகளாக அவர் அதைச் செய்யவில்லை. உலகக் கோப்பை வரவிருக்கும் நிலையில் இப்போது அதை எப்படிச் செய்வார்?" என்று கேள்வியெழுப்பினார்.புதிய பந்துவீச்சுக்கு சௌகரியமாக இருக்கும் பட்சத்தில், சில போட்டிகளுக்கு தொடர்ந்து மூன்றாவது இடத்தில் பேட் செய்ய வேண்டும் என்றும், பின்னர் தேவைப்பட்டால் நான்காவது இடத்திற்கு மாறலாம் என்றும் பதான் பரிந்துரைத்தார்.

Story first published: Thursday, December 18, 2025, 19:47 [IST]
Other articles published on Dec 18, 2025
English summary
The article examines the debate over Surya Kumar Yadavs captaincy amid Irfan Pathans comments, assessing his high win rate, form concerns, and the teams response in the India versus South Africa T20I series ahead of the final match in Ahmedabad.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+