யாருக்கு வாய்ப்பு
இந்த நிலையில் , இந்திய ஒருநாள் அணி நாளை தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட உள்ளது. ஆனால் அணியில் இடம்பெற்று இருந்த தமிழக வீரர் வாசிங்டன் சுந்தர் கொரோனா தொற்று காரணமாக இந்திய அணியிலிருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, வாசிங்டன் பதிலாக எந்த 3 வீரருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என தற்போது காணலாம்
ஹர்சல் பட்டேல்
ஐ.பி.எல். தொடரில் கடந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்சல் பட்டேல், நியூசிலாந்த தொடரில் அறிமுகமானார். இதில் பேட்டிங் மற்றும் பந்தவீச்சு என இரண்டிலும் ஹர்சல் பட்டேல் கலக்கினார். இந்த நிலையில் தென்னாப்பிரிக்க தொடரில் அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போதிய அளவில் வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது வாசிங்டன் சுந்தர் இல்லாததால் அணியின் balanceக்காக ஹர்சல இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.
ரவி பிஸ்னாய்
இளம் சுழற்பந்துவிச்சாளரான ரவி பிஸ்னாய், இந்தியாவின் எதிர்காலமாக கருதப்படக் கூடியவர். U19 கிரிக்கெட், ஐ.பி.எல்., சையது முஸ்தாக் அலி தொடரில் கலக்கிய ரவி பிஸ்னாய், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் அணியில் வாய்ப்பளிக்கப்படும் என்று தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா கூறினார். தற்போது அணியில் ஒரு சுழற்பந்துவீச்சாளர் குறைவதால் ரவி பிஸ்னாய் அணியில் சேர்க்கப்படலாம்
ஷாருக்கான்
தமிழக அணியின் அதிரடி வீரர் ஷாருக்கானுக்கும் தென்னாப்பிரிக்க தொடரில் களமிறங்கி வாய்ப்புள்ளது. தென்னாப்பிரிக்க தொடரில் அணியின் பேட்டிங்கை பலப்படுத்த வேண்டும் என்று தேர்வுக்குழு நினைத்தால் ஷாருக்கானுக்கு தான் அந்த வாய்ப்பு. ஆனால், தற்போது போதிய நேரம் இல்லாததால் மாற்று வீரரை அறிவிக்கும் வாய்ப்பு குறைவு என பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.