ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டி20 கிரிக்கெட் தொடர் 1-1 என்ற நிலையில் சமனில் முடிவடைந்தது. இதன்பின் நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படவுள்ளார்.
