மும்பை : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம் வேகப்பந்துவீச்சாளர்களின் மட்டமான செயல்பாடு தான். அதுவும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் தென்னாப்பிரிக்காவை 400 ரன்கள் அடிக்க விட்டதெல்லாம் யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாது.
பும்ரா, சிராஜ் ஆகியோர் ஒரு அளவு தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை கட்டுப்படுத்த முயன்றாலும் மற்ற இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களான ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் வாரி வழங்கும் வள்ளலாக மாறிவிட்டார்கள்.
