பார்ல்: இந்திய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது. இந்த நிலையில் தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் கடைசி ஒருநாள் போட்டி இன்று தொடங்கியுள்ளது.
