மும்பை: இந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் கிடைத்த வெற்றியையடுத்து, தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். "வெற்றிக் கோட்டைத் தாண்டியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" எனக் குறிப்பிட்ட அவர், இது ஒரு சாதனை சேஸிங் என்றார்.
இந்திய அணிக்கு எதிராகத் தாங்கள் எந்த அளவுக்குச் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதையும் இந்தக் கடினமான போட்டி காட்டுவதாகத் தெரிவித்தார்.பந்துவீச்சில் இன்னும் தெளிவான முன்னேற்றங்கள் தேவை என்று பவுமா குறிப்பிட்டார்.

இது குறித்து பேசிய அவர், " பேட்டிங்கில் உறுதியாகப் பெரிய முன்னேற்றம் தெரிகிறது. டாப் ஆர்டர் சிறப்பாகச் செயல்பட்டது. எய்டன் மார்க்ரம், ஃப்ரெட்ஸ்கி ஆகியோர் தங்கள் ஃபார்மைத் தொடர்ந்ததுடன், ரியான் போஷ் முதிர்ச்சியுடன் விளையாடினார். ஆட்டத்தை முடித்த விதமும் சிறந்ததொரு வெளிப்பாடாய் அமைந்தது."
"நான் எய்டனுடன் இணைந்து ஆடியபோது, அவருடன் ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முயற்சித்தேன். நவீன கிரிக்கெட்டில் ஆட்டத்தை எடுத்து செல்வது அவ்வளவு முக்கியமில்லை என்றாலும், இது ஒரு யுக்தி. பின்வரும் வீரர்கள் எந்த ஸ்கோரையும் துரத்த முடியும் என்று நான் நம்பினேன். டெவால்ட் பிரெவிஸை முன்னதாகவே களமிறக்கும் எங்கள் திட்டம் எங்களுக்குச் சாதகமாக அமைந்தது."
"இந்தத் தொடர் ஒரு பரபரப்பான தொடராக அமையும் என்று கருதுகிறேன். இங்கே இருக்கும் வீரர்கள் எங்கள் அணியின் சிறந்தவர்கள். ஒவ்வொரு இடத்திற்கும் கடுமையான போட்டி நிலவுவதுடன், பேட்ஸ்மேன்கள் தங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என அறிவார்கள். அதேபோல், வேகப்பந்து வீச்சிலும் புதிய திறமைகளை வளர்த்து பலத்தை உருவாக்குகிறோம். இத்தகைய ஆட்டங்கள் எங்களது நம்பிக்கைக்குப் பெரிய ஊக்கத்தை அளிக்கின்றன."
"நான் ஒரு மருத்துவர் அல்ல, அதனால் பர்கர் மற்றும் டோனி டி சோர்ஸி ஆகியோரின் நிலை குறித்து எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. வெளிப்படையாகச் சொல்லப்போனால், அவர்களின் நிலை அவ்வளவு நன்றாகத் தெரியவில்லை. பர்கரால் தனது ஓவர் ஸ்பெல்லை முடிக்கும் நிலையில் இல்லை. அவர்கள் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுவார்கள் என்று நம்புகிறேன். தேவைப்பட்டால், சனிக்கிழமையன்று களமிறங்கத் தயாராக இருக்கும் மற்ற வீரர்கள் எங்களிடம் உள்ளனர்" என்று பவுமா கூறினார்.