IND vs SL: போராடிய இலங்கை.. அடுத்தடுத்து விழுந்த விக்கெட்.. வெற்றி முகத்தில் இந்தியா
மும்பை: இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில், மழையின் குறுக்கீடு காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்து, 16 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸில் பசிந்து சூரியபண்டார மற்றும் கமிந்து மெண்டிஸ் ஜோடி அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு சவால் அளித்தது. இந்த இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நூறு ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அரைசதம் கடந்த கமிந்து மெண்டிஸ் 55 ரன்கள் எடுத்திருந்தபோது, ஷுப்மன் கில்லின் சிறப்பான கேட்ச் மூலம் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சூரியபண்டார 157 பந்துகளில் 90 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இலங்கை அணியின் வலுவான கூட்டணியை உடைத்த பிறகு இந்திய பந்துவீச்சாளர்கள் ஆட்டத்திற்குள் மீண்டும் பலமாக நுழைந்தனர். ரன் குவிப்பை கட்டுப்படுத்தியதோடு விக்கெட்டுகளையும் வீழ்த்தி நெருக்கடி அளித்தனர்.
தற்போது சோனல் தினுஷா 6 ரன்களுடனும், கேஷர நுவன்தா 3 ரன்களுடனும் களத்தில் போராடி வருகின்றனர். இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் சரண்ஷ் ஜெயின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
ஆட்டத்தின் 72.4 ஓவர்கள் முடிந்திருந்த நிலையில், மைதானத்தைச் சுற்றி கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இதனால் உடனடியாக ஆட்டம் நிறுத்தப்பட்டு வீரர்கள் அரங்குக்குத் திரும்பினர். மைதான ஊழியர்கள் விரைந்து வந்து தார்ப்பாய்கள் கொண்டு ஆடுகளத்தை மூடினர். தற்போது இந்திய அணியை விட 16 ரன்கள் மட்டுமே இலங்கை அணி கூடுதல்க உள்ளது. பைவசம் 4 விக்கெட்டுகள் உள்ளன.


Click it and Unblock the Notifications

