கொழும்பு : இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஒருநாள் தொடரை 2 - 0 என இழந்தது இந்திய அணி. 27 ஆண்டுகளில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா இழப்பது இதுவே முதல் முறை. அதிலும் பலவீனமான இலங்கை அணிக்கு எதிராக ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற அனுபவ வீரர்கள் கொண்ட இந்திய அணி தோல்வி அடைந்து இருக்கிறது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி டை ஆனது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1 - 1 என சமன் செய்யுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
