
ஆடுகளம்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்துள்ளது. இந்த ஆட்டத்திற்கு புதிய ஆடுகளம் தான் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நேற்றைய ஆட்டம் மாதிரி முதல் 4 ஓவரில் பந்து ஸ்விங் ஆகும். பிறகு ரன் குவிப்புக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும். கடைசி போட்டியில் களமிறங்கியதான் முலம் அதிக சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா படைத்தார்.

4 மாற்றம்
இந்தப் போட்டியில் இந்திய அணி 4 மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இஷான் கிஷனுக்கு நேற்று தலையில் பந்து பட்டதால், இன்றைய ஆட்டத்தில் அவர் களமிறங்கவில்லை. இதே போன்று பும்ரா, புவனேஸ்வர் குமார், சாஹல் ஆகியோர் ஓய்வு எடுத்துள்ளனர். அவருக்கு பதிலாக பிஸ்னாய், குல்தீப், முகமது சிராஜ்,அவேஷ் கான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

6 பேட்ஸ்மேன்
கடைசி போட்டியில் இந்தியா ஒரு பேட்ஸ்மேன் இல்லாமல் வெறும் 6 பேட்ஸ்மேன்களை வைத்து விளையாடுகிறது. இதனால் ஏதேனும் ஒரு வீரரும் கடைசி வரை நின்று விளையாட வேண்டும். இலங்கை அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜெய்விக்கரமா, மிஸ்ஹாரா ஆகியோர் அணியில் இல்லை.

பிளேயிங் லெவன்
உத்தேச இந்திய அணி 1, சஞ்சு சாம்சன், 2, ,ரோகித் சர்மா, 3.ஸ்ரேயாஸ் ஐயர், 4, வெங்கடேஷ் ஐயர், 5, ஜடேஜா, 6, தீபக் ஹூடா, 7, ஹர்சல் பட்டேல் 8 முகமது சிராஜ், 9 அவேஷ் கான் 10, குல்தீப் யாதவ், 11, ரவி பிஸ்னாய்


Click it and Unblock the Notifications