Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL: இந்திய அணிக்கு கிடைத்த புது ஆல்ரவுண்டர்.. இலங்கைக்கு எதிராக பேட்டிங்கிலும் கலக்கிய சிராஜ்

காலே: இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அடித்த பிரம்மாண்டமான சிக்ஸர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காலே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், பேட்டிங்கில் பெரிய அளவில் அறியப்படாத சிராஜ், சுழற்பந்து வீச்சாளர் கேஷாரா நுவன்தாவின் பந்துவீச்சில் டீப் மிட்-விக்கெட் திசையில் அபாரமான ஒரு ஸ்லாக்-சுவீப் சிக்ஸரை விளாசினார்.

சிராஜ் தனது 15 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த குறுகிய அதிரடி இன்னிங்ஸின் போது இந்த சிக்ஸரை அடித்தார். சிராஜின் கிட்டத்தட்ட 50 டெஸ்ட் போட்டிகள் கொண்ட சர்வதேச வாழ்க்கையில் இது அவரது நான்காவது சிக்ஸர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. தான் எதிர்கொண்ட நான்காவது பந்திலேயே, சிராஜ் முழங்காலிட்டு தனது முழு பலத்தையும் பயன்படுத்தி பந்தை எல்லைக்கோட்டுக்கு வெளியே பல மீட்டர் தூரத்திற்கு பறக்கவிட்டார்.

Mohammed siraj

இந்திய அணி ஏற்கனவே 432/6 என்ற வலுவான நிலையில் இருந்தபோது, நீண்ட நேரம் நிதானமாக விளையாடக்கூடிய குல்தீப் யாதவுக்கு முன்பாக சிராஜ் களம் இறக்கப்பட்டார். வேகமான ரன் குவிப்பிற்காகவே அவர் முன்னதாக அனுப்பப்பட்டார். இந்தத் தொடருக்கு முன்னதாக நடந்த பயிற்சிப் போட்டியில் சிராஜ் நான்கு சிக்ஸர்களை அதில் மூன்று தொடர்ச்சியான சிக்ஸர்கள் அடித்து, கடைசி ஓவரில் இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியிலும் சிராஜ் பலமுறை சிக்ஸர் அடிக்க முயன்றார். இறுதியில், வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ வீசிய ஷார்ட் பந்துகளுக்குப் பிறகு, ஒரு ஃபுல் லெந்த் பந்தை மிட்-ஆஃபில் கேட்ச் கொடுத்து 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆனபோது இந்தியாவின் ஸ்கோர் 446/8 ஆக இருந்தது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இலங்கை மண்ணில் சிராஜ் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருப்பது இந்திய அணிக்கு சாதகமான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

மறுபுறம், தேவ்தத் படிக்கல்லின் இரட்டைச் சதம் அடிக்கும் முயற்சி 167 ரன்களில் முடிவுக்கு வந்தது. இருப்பினும், மழையால் பாதிக்கப்பட்ட இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 460/9 ரன்களை எடுத்து வலுவான நிலையை எட்டியுள்ளது.

மழை மற்றும் ஈரமான மைதானம் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் தாமதமாகவே தொடங்கியது. இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசினர். இரண்டாவது நாளை 288/2 என்ற ஸ்கோருடன் தொடங்கிய இந்தியா, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.

ரிஷப் பந்த் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய படிக்கல் 167 ரன்களில் பிரபாத் ஜெயசூர்யா பந்துவீச்சில் நிரோஷன் டிக்வெல்லாவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.துருவ் ஜூரலின் சிறப்பான 57 ரன்களும், மானவ் சுதாரின் 24 ரன்களும் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த உதவின. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

Story first published: Monday, August 17, 2026, 6:30 [IST]
Other articles published on Aug 17, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+