IND vs SL: தடவி.. தடவி. கேட்ச் பிடித்த இலங்கை விக்கெட் கீப்பர்.. பாதியில் பறிப்போன கில் அதிர்ஷ்டம்
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது, இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். காலேவில் நடைபெற்ற தொடக்க போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சோபிக்கத் தவறிய 26 வயதான கில், இந்த ஆட்டத்தில் நிதானமாக விளையாடி அரைசதம் கடந்து மீண்டு வந்தார்.
இருப்பினும், இரண்டாவது செஷனின் கடைசிக்கு முந்தைய பந்தில், கில் தனது கவனத்தை இழந்து அசிதா பெர்னாண்டோ வீசிய ஆஃப்-ஸ்டம்பிற்கு வெளியே சென்ற ஷார்ட் டெலிவரியை அடிக்க முயன்றார். பந்து அவரது பேட்டின் அவுட் சைடு எட்ஜில் பட்டு விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லாவிடம் சென்றது, அவர் சற்று தடுமாறி அந்த கேட்ச்சை பிடித்தார்.

இதே ஓவரில், இதற்கு முந்தைய பந்திலும் கில் இதேபோன்ற ஒரு மோசமான ஷாட்டை அடித்து தப்பினார். ஆனால், இந்த முறை அதிர்ஷ்டம் அவரிடம் இல்லை. 108 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கில் பெவிலியன் திரும்பினார்.
இந்த இன்னிங்ஸின் போது, கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 3000 ரன்களைக் கடந்தார். இதன் மூலம் 26 ஆண்டுகள் 349 நாட்களில் இந்த மைல்கல்லை எட்டிய நான்காவது மிக இளம் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். கடந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக கேப்டனாகப் பொறுப்பேற்றது முதல், கில் டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார். கேப்டனாக விளையாடிய 18 இன்னிங்ஸ்களில் அவரது பேட்டிங் சராசரி கிட்டத்தட்ட 72 ஆக உள்ளது.
கொழும்பில் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்த இந்திய அணியின் கே.எல். ராகுல் 11-வது ஓவரில் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆக்ரோஷமாக விளையாடி 53 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்தார்.


Click it and Unblock the Notifications

