Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL: ராகுலுக்கு அடுத்து இவர் தான் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன்.. புஜாரா பாராட்டு

மும்பை: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துருவ் ஜூரெல் அடித்த சதத்தை அடுத்து, இந்திய அணியில் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதில் கேஎல் ராகுலுக்கு அடுத்தபடியாக ஜூரெல் இரண்டாவது சிறந்த வீரர் என்று முன்னாள் இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா பாராட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஜூரெல் 177 பந்துகளில் 115 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 503/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இலங்கையணி தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டநேர முடிவில் 8 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 495 ரன்கள் பின்தங்கியுள்ளது.

Ind vs SL

சோனி ஸ்போர்ட்ஸ் தளத்தில் நடைபெற்ற உரையாடலின் போது, வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சுகளுக்கு எதிராக ஜூரெல் விளையாடிய விதம் குறித்து செதேஷ்வர் புஜாரா வெகுவாகப் பாராட்டினார். "துருவ் ஜூரெலின் footwork மிகவும் துல்லியமானது. அவர் பிரண்ட்-பூட் மற்றும் பேக்-பூட் என இரண்டிலும் சிறப்பான ஷாட்களை விளையாடுகிறார்.

IND vs SL: துருவ் ஜூரல் கொண்டாட்டம்.. கையில் பச்சை குத்தியதன் அர்த்தம் என்ன?

IND vs SL: துருவ் ஜூரல் கொண்டாட்டம்.. கையில் பச்சை குத்தியதன் அர்த்தம் என்ன?

தற்போதைய இந்திய அணியில், கே.எல். ராகுலுக்குப் பிறகு வேகப்பந்து வீச்சாளர்களை மிகச் சிறந்த முறையில் எதிர்கொள்பவர் ஜூரெல் தான் என்பது எனது கருத்து. அவரிடம் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் மற்றும் இறங்கி வந்து அடிக்கும் ஷாட்கள் எனப் பலதரப்பட்ட ஆட்டத்திறன் உள்ளது" என்று புஜாரா கூறினார்.

"அவரது திறமையை இந்திய அணி நிர்வாகம் முன்பே கண்டறிந்து ஆதரவு அளித்தது. ஆனால் அதற்கேற்ற செயல்திறன் உடனடியாக வெளிப்படவில்லை. இதனால் அவர் மீது சிறிய அழுத்தம் இருந்தது. ஆனால், மைதானத்தில் சிறப்பாக செயல்படுவதன் மூலமே அந்த அழுத்தத்தை களைய முடியும். அதனை கடந்த போட்டியிலும், தற்போதும் ஜூரெல் நிரூபித்துள்ளார்" என்று அவர் கூறினார். ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக இருக்கும் நிலையில், ஜூரெல் ஒரு சிறந்த பேட்டராக விளையாடி டெஸ்ட் போட்டிகளில் நீண்ட காலத்திற்கு நீடிக்க முடியும் என்றும் புஜாரா சுட்டிக்காட்டினார்.

"அவரது பேட்டின் விளிம்பில் பந்துகள் படவே இல்லை. அனைத்து பந்துகளுமே பேட்டின் நடுப்பகுதியில் பட்டன. இது அவர் எவ்வளவு நேர்த்தியான பேட்டர் என்பதைக் காட்டுகிறது. இந்திய அணி சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும் பேட்டர்களை தேடி வருகிறது. சுழற்பந்து வீச்சை சரியாக விளையாடாத காரணத்தினாலேயே பலமுறை நாம் சொந்த மண்ணில் தோற்றுள்ளோம்" என்று கைஃப் விவரித்தார்.

IND vs SL: நைட் வாட்ச்மேன் கூட காலி.. 8 ரன்னில் 2 விக்கெட் இழந்த இலங்கை.. இந்தியா அபாரம்

Also Read

IND vs SL: நைட் வாட்ச்மேன் கூட காலி.. 8 ரன்னில் 2 விக்கெட் இழந்த இலங்கை.. இந்தியா அபாரம்

"அவர் வேகப்பந்து வீச்சை நன்றாக விளையாடுவார் என்று எனக்குத் தெரியும். ஆனால் சுழற்பந்துக்கு எதிராகவும் பேக் பூட்டில் விளையாடினார். கால்களை சரியாகப் பயன்படுத்தி ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களையும் அடித்தார். காலே டெஸ்டில் அவர் விளையாடச் சென்றபோது மிகுந்த அழுத்தம் இருந்தது. அங்கு அவர் சரியாக விளையாடாமல் போயிருந்தால், இந்த டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைத்திருக்காது. ஆனால் கடினமான சூழ்நிலையிலும் ஆதிக்கம் செலுத்தி விளையாடியுள்ளார்" என்று கைஃப் குறிப்பிட்டார்.

Story first published: Monday, August 24, 2026, 20:17 [IST]
Other articles published on Aug 24, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+