IND vs SL: நைட் வாட்ச்மேன் கூட காலி.. 8 ரன்னில் 2 விக்கெட் இழந்த இலங்கை.. இந்தியா அபாரம்
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்ட் ஸ்லிப் திசையில் ஒரு அற்புதமான கேட்ச் பிடித்து இலங்கை தொடக்க ஆட்டக்காரர் லஹிரு உதாராவை குறைந்த ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார்.
இலங்கையின் முதல் இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தில் இந்த விக்கெட் வீழ்ந்தது. பிரசித் கிருஷ்ணா வீசிய ஆஃப்-ஸ்டம்பிற்கு வெளியே வந்த பந்து லஹிரு உதாராவின் பேட்டின் விளிம்பில் பட்டு தேர்ட் ஸ்லிப்பில் வலதுபுறமாக பறந்தபோது, அங்கு நின்றிருந்த ஜெய்ஸ்வால் காற்றில் முழுமையாகப் பாய்ந்து அந்த பந்தை மிக நேர்த்தியாகப் பிடித்தார்.

இதன் மூலம் லஹிரு உதாரா 6 பந்துகளில் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணி 1.2 ஓவர்களில் 1 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. அதன் பிறகு பிரபாத் ஜெயசூர்யா நைட் வாட்ச் மேனாக களமிறங்கி மானவ் சுதர் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். இதனால், 2வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 8 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
முன்னதாக, இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களான கே.எல். ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 37 ரன்கள் சேர்த்தது. இதில் ராகுல் 18 ரன்களும், ஜெய்ஸ்வால் 45 ரன்களும் எடுத்தனர். அடுத்து களம் இறங்கிய தேவ்தத் படிக்கல் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். அவர் 193 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் எடுத்து, டெஸ்ட் அரங்கில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார்.
அவரைத் தொடர்ந்து நடுவரிசையில் சுப்மன் கில் 50 ரன்கள் மற்றும் ரிஷப் பண்ட் 63 ரன்கள் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர். ரவீந்திர ஜடேஜா தன் பங்கிற்கு 43 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் தூணாக நின்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரெல், தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை விளாசினார். அவர் 177 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 115 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 138 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 503 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.


Click it and Unblock the Notifications

