இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டம்.. அனலை கக்கும் சிராஜ், பிரசித் கிருஷ்ணா.. சமனில் முடியு வாய்ப்பு
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் லெவன் அணிக்கு எதிராக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தின் இறுதி நாளான இன்று, இந்திய அணியின் பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் தங்களது திறனை சோதித்துப் பார்த்து வருகின்றனர்.
இன்றைய ஆட்டத்தின் தொடக்கத்தில், இந்திய அணி தனது நேற்றைய ஸ்கோரான 357/6 ரன்களுடன் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் தேவ்தத் படிக்கல் சிறப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல் 142 ரன்கள் குவித்தார். ரவீந்திர ஜடேஜாவும் அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இலங்கை கிரிக்கெட் லெவன் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியதில் இருந்தே இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசிய ஐந்தாவது ஓவரில், ரவிந்து ரசந்தா 8 ரன்கள் எடுத்திருந்த போது எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா, பசிந்து சூரியபண்டாரவை 4 ரன்களில் போல்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினார்.
10 ஓவர்கள் முடிவில் இலங்கை கிரிக்கெட் லெவன் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் நிஷான் மதுஷ்கா 21 ரன்களுடன் தொடர்ந்து விளையாடி வருகிறார்.இந்தியாவின் 15 பேர் கொண்ட டெஸ்ட் அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 29 வயது வேகப்பந்து வீச்சாளர் அகிப் நபி தார், முதல் இன்னிங்ஸில் பேட்டிங் அல்லது பந்துவீச வாய்ப்பு பெறவில்லை.
இந்நிலையில், இன்றைய ஆட்டத்தின் 12-வது ஓவரில் பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக பந்துவீச அவர் அழைக்கப்பட்டார். இது தான் கடைசி நாள் ஆட்டம் என்பதால், இந்தப் போட்டி சமனில் முடிவடைய வாய்ப்புள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிகளை சோனி டென் தொலைக்காட்சியில் காணலாம்.


Click it and Unblock the Notifications

