
கேப்டனாக ஜொலித்தார்
ரோகித் சர்மாவின் முயற்சிக்கு நல்ல பலனும் கிடைத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்தடுத்து 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதே போன்று நடுவர்கள் 2 முறை தவறான அவுட் வழங்கிய போதும், ரோகித் சர்மா நடுவரிடம் ரிவியூ செய்து மாற்றினார். இந்த நிலையில், முழு நேர ஒருநாள் கேப்டனாக முதல் போட்டி என்பதால் ரோகித் கொஞ்சம் டென்சனாகவே காணப்பட்டார்.

பொறுமை இழந்த ரோகித்
இளம் வீரர் பிரஷித் கிருஷ்ணா ஃபில்டிங்கில் சொதப்பியதால் கேப்டன் ரோகித் சர்மா கடுப்பாகினார். ஒரு முறை கைக்கு வந்த பாலை தடுக்க பிரஷித் கிருஷ்ணா தவறவிட்டார். இதனால் அது பவுண்டரிக்கு சென்றது. அப்போதும் கூட ரோகித் சர்மா பொறுமை காத்தார். ஆனால் அடுத்து நிகழ்ந்த சம்பவம் ரோகித்தை பொறுமை இழக்க செய்தது.

சிக்சர் விட்டார்
மேற்கிந்திய தீவுகள் வீரர் அடித்த பந்து பவுண்டரி லைனுக்கு சென்றது.அதனை ஓடி வந்து பிடிக்க முயன்ற பிரஷித் கிருஷ்ணா, அதை தவறவிட்டதும் அல்லாமல், பந்தை சிக்ஸ்க்கு விட்டார். இதனால் கடுப்பான ரோகித் சர்மா, எதோ ஹிந்தியில் கெட்ட வார்த்தையால் திட்டினார். ஆனால் அது வீடியோ கேமிராவில் பதிவானது.

கவனம் செலுத்தனும்
பிரஷித் கிருஷ்ணா பந்து சிறப்பாக வீசி விக்கெட் எடுத்தாலும், ஃபில்டிங்கில் அவர் கவனம் செலுத்த வேண்டும். இன்று மட்டும் அவர் 10 ரன்களை ஃபில்டிங்கில் கோட்டை விட்டார். இந்த ரன்கள் முக்கியமான போட்டிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் . முன்பு போல் மோசமான ஃபில்டரை பந்து வராத பக்கம் ஒளிய வைக்க முடியாது. இதனால் பிரஷித் கிருஷ்ணா ஃபில்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications











