அகமதாபாத்: இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி ஏற்கனவே நிலையில், நாளைய போட்டி சமிபிரதாய ஆட்டமாக மட்டும் தான் இருக்கும்.
எனினும் தொடரை முழுமையாக கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி நாளைய போட்டியில் விளையாடுகிறது.

இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் முழு உடல் தகுதியை எட்டியுள்ளனர். இதனால் கடைசி ஆட்டத்தில் இவ்விருவரும் அணியில் இடம்பெற உள்ளனர்.
இதே போன்று பந்துவீச்சில் அவேஷ் கான், தீபக் சாஹர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவ் அல்லது ரவி பிஸ்னாயை களமிறக்க ரோகித் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. குறைந்தது 4 மாற்றங்கள் அணியில் இருக்கலாம்.
உத்தேச அணி 1, ரோகித் சர்மா, 2, ஷிகர் தவான். 3, விராட் கோலி, 4,சூரியகுமார் யாதவ், 5, ஸ்ரேயாஸ் ஐயர், 6, ரிஷப் பண்ட், 7, வாசிங்டன் சுந்தர், 8,தீபக் சாஹர். 9, பிரஷித் கிருஷ்ணா. 10,ஆவேஷ் கான். 11. குல்தீப் யாதவ்/ரவி பிஸ்னாய்