
பி.சி.சி.ஐ. ஆலோசனை
இந்த நிலையில், இந்திய அணியில் மேலும் சிலருக்கு கொரோனா ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் தொடரை எப்படி நடத்துவது என்று குறித்து பி.சி.சி.ஐ. அவசர ஆலோசனையில் ஈடுபட்டது.

முக்கிய முடிவு
இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மற்ற வீரர்களுக்கு யாரும் கொரோனா ஏற்படவில்லை என்பதால் போட்டியை திட்டமிட்டு நடத்துவது என்று பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது. தேவைப்பட்டால் போட்டியை 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படலாம் என்றும் ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டது.

தயாராக இருங்க
மேலும் சுப்மான் கில், இஷான் கிஷன், குர்னல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, ஷாரூக்கான், பிரித்வி ஷா, சேத்தன் சுக்ரியா ஆகியோரை தயாராக இருக்கும் படி பி.சி.சி.ஐ. அறிவுறுத்தியுள்ளது. தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி 15 வீரர்களை மட்டுமே அனுப்பியுள்ளது. இதனால் கூடுதல் வீரர்களை அனுப்பும்மாறு அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் பி.சி.சி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது.

புதிய அணி
கடந்த முறை, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அப்போது போட்டியை ரத்து செய்யாமல் முற்றிலும் புதிய அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. தற்போது அதே போன்ற சூழல் ஏற்பட்டால் புதிய அணியை களமிறக்க பி.சி.சி.ஐ. அதிரடி முடிவை எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











