மும்பை: சஞ்சு சாம்சனை சுப்மன் கில்லுக்காக பேட்டிங் வரிசையில் கீழ் இறக்கும் தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மன்ஜரேக்கர், இந்திய அணி நிர்வாகத்திடம் வலியுறுத்தினார். 2025 ஆசியக் கோப்பை தொடருக்கு முன், தொடக்க வீரர் நிலையிலிருந்து அவர் கீழ் இறக்கப்பட்டதால், சாம்சனின் ஆட்ட உத்வேகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
சில மாதங்களுக்குப் பிறகு சஞ்சு சாம்சன், மீண்டும் முதல் வரிசை இடத்தைப் பிடித்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அவர் அடித்த ஆட்டமிழக்காத 97 ரன்கள், இந்தியாவை 2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேற வழிவகுத்தது.

நடுவரிசையில் சஞ்சு சாம்சன் மோசமாக ஆடினார். உலகக் கோப்பைக்கு முன் தேர்வாளர்கள் அவரை மீண்டும் தொடக்க வீரராக நியமித்தபோதும், அவரால் பழைய ஆட்டத்திறனை மீட்டெடுக்க முடியவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற தேர்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் என சஞ்சய் மன்ஜரேக்கர் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "சஞ்சு சாம்சன் தனது திறமையை வெளிக்காட்டினார். நான் இதை முன்பே சொல்லியிருக்கிறேன், இவர் சமீபத்தில் ஐந்து ஆட்டங்களில் மூன்று டி20ஐ சதங்களை அடித்தவர். ஆனால், சுப்மன் கில்லின் சிறப்பான டெஸ்ட் ஆட்டத்திற்காக, சாம்சன் கீழ் வரிசைக்குத் தள்ளப்பட்டு, கில் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். இதுபோன்ற பெரும் பிழைகள் இனி நடக்கக்கூடாது."
"சாம்சன் அந்த இடத்தைப் பிடிக்க நீண்ட காலம் எடுத்துள்ளதால், இத்தகைய தவறுகளை நீங்கள் மீண்டும் செய்யக்கூடாது. சஞ்சு சாம்சனுக்கும், இஷான் கிஷன், அபிஷேக் சர்மா அல்லது திலக் வர்மா போன்றோர்க்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், வரும் இளம் பேட்டர்ஸ் பலர் தங்களது ஆட்டத்தில் அதிரடியான டி20 பாணியைச் செலுத்த முயற்சிக்கிறார்கள்."
"சாம்சன் ஏற்கெனவே ஒரு இளம் வீரராகவே ஒரு சக்தியாக இருந்தார். சிறந்த பந்துகளையும் அதிரடியாக அடிக்கும் திறமையும், சாதாரணமாக அடிக்கும் திறமையும் அவருக்கு உண்டு," என்று அவர் கூறினார்.சமீபத்தில் நமீபியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக சாம்சன் தனது ஆட்டத் திறனை சாம்சன் காட்டினார்.
"எனினும், கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வாழ்வா சாவா என்ற’ முக்கியமான ஆட்டத்தில், இந்திய அணியின் சவாலான ரன் சேஸிங்கில் முன்னணி வகித்து, தனது ஆட்டத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றார். இதனை பாராட்டிய அவர், "என்ன ஒரு ஆட்டம்! கொஞ்சம் பதற்றம், டென்ஷன். நாங்கள் ஏற்கனவே அரையிறுதியிலும் இறுதிப் போட்டியிலும் இருப்பது போல, ஆட்டத்தைச் சுற்றியுள்ள சூழல் இருந்தது. மேற்கிந்தியத் தீவுகள் 195 ரன்கள் எடுத்ததும், அது இன்னும் தீவிரம் அடைந்தது.

"ஆட்டம் பாதியிலேயே நான் கவலைப்பட்டேன், ஏனெனில் இந்திய பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. இது இந்தியாவிற்கு ஒரு உண்மையான சோதனையாக இருக்கும் என்று நான் நினைத்தேன்."ஷாய் ஹோப் தலைமையிலான அணிக்கு எதிரான வெற்றியின் மூலம், இந்திய அணி டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு ஆறாவது முறையாகவும், தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் முன்னேறியுள்ளது. அடுத்து இங்கிலாந்தை மார்ச் 5, வியாழன் அன்று வான்கடே மைதானத்தில் சந்திக்கவுள்ளது.