சென்னை: டி20 உலகக் கோப்பை 2026 சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வேக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் சிஎஸ்கே வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் தேர்வு செய்துள்ளார். இப்போட்டி, பிப்ரவரி 26 வியாழக்கிழமை அன்று சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
டி20 உலகக் கோப்பை 2026 சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி, அரையிறுதிக்குத் தகுதிபெற இந்தியாவுக்கு மிக முக்கியமானதாகும். தென் ஆப்பிரிக்காவிடம் அடைந்த பெரும் தோல்விக்குப் பிறகு, இந்தியாவின் நிகர ரன் ரேட் (NRR) -3.80 ஆகக் குறைந்து பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

இத்தொடரில் இதுவரை கண்ட ஒரே தோல்வியிலிருந்து மீண்டு வர இந்திய அணி கடுமையாகப் போராடும். இருப்பினும், தற்போது அவர்களின் தகுதிபெறும் நிலை சற்று சிக்கலாக இருப்பதால், அவர்கள் அழுத்தத்திற்குள்ளாகியுள்ளனர். அரையிறுதிக்குச் செல்ல, அவர்கள் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறுவதுடன், தென் ஆப்பிரிக்கா தங்கள் எஞ்சிய போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

ஜிம்பாப்வேக்கு எதிராக 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு, வெஸ்ட் இண்டீஸ் அணி +5.35 என்ற வலுவான நிகர ரன் ரேட்டுடன் குரூப் 1 பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஒருவேளை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவுடன் புள்ளிகளில் சமன் செய்தால், வெஸ்ட் இண்டீஸின் நிகர ரன் ரேட்டை எட்டுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருக்கும்.
,இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடந்த ஆட்டத்திலிருந்து இந்திய அணியின் பிளேயிங் லெவனில் லெவனில் தான் இரண்டு மாற்றங்களைச் செய்திருப்பதாக பத்ரிநாத் குறிப்பிட்டார். முதல் மாற்றம், திலக் வர்மாவை நீக்கிவிட்டு, விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனை மூன்றாவது இடத்தில் சேர்த்தது. இத்தொடரில் திலக் இதுவரை தடுமாறி வருகிறார். அவர் ஐந்து போட்டிகளில் 21.40 சராசரி மற்றும் 118.88 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 107 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
பத்ரிநாத்தின் இரண்டாவது மாற்றம், ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை நீக்கிவிட்டு, டி20 சர்வதேச போட்டியின் துணை கேப்டன் அக்சர் படேலை எட்டாவது இடத்தில் சேர்த்துள்ளார். கடந்த தென் ஆப்பிரிக்கா போட்டியிலிருந்து அக்சர் படேல் விலக்கப்பட்டிருந்தார். சுந்தர் இரண்டு ஆட்டங்களில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்த தவறிவிட்டார், அதேசமயம் அக்சர் மூன்று போட்டிகளில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான பத்ரிநாத்தின் இந்திய அணி: அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.