மும்பை : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் மும்பை அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர்களான இஷான் கிஷன், திலக் வர்மா உள்ளிட்டோர் சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மும்பை லாபி முடிவுக்கு வந்துவிட்டதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
