சென்னை: 2026 டி20 உலகக் கோப்பையில், சிவம் தூபேக்குப் பந்துவீச வாய்ப்பளிக்கக் கூடாது என இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில், தூபே இரண்டு ஓவர்களில் 46 ரன்களை வாரிவழங்கி, நான்கு வைடுகள், இரண்டு நோ-பால்கள் வீசி திணறினார். எனினும், முதலில் பேட் செய்து 256 ரன்கள் குவித்த இந்தியா, 72 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
தூபேவின் பந்துவீச்சு குறித்து பேசிய வாகன்: "ஆறாவது பந்துவீச்ளாளராக , இரண்டு ஓவர்களில் 46 ரன்களை வழங்கியுள்ளது. இது வேறு ஆட்டமாக இருந்திருந்தால், தூபேவுக்கு இத்தனை ஓவர்கள் கிடைத்திருக்காது. வெற்றி உறுதியானதால் கேப்டன் அவருக்கு ஓவர்களைக் கொடுத்தார். இதைப் பற்றி நான் அதிகம் யோசிக்கவில்லை. மற்ற பந்துவீச்சும் சிறப்பாகவே இருந்தது. ஆனால், அவர் பந்துவீசும் விதத்தைப் பார்த்தால், மீண்டும் வீச நேர்ந்தால், இந்தியா தடுமாறுகிறது என்றுதான் அர்த்தம்," என்றார்.

ஜிம்பாப்வே அணிக்கு 184 ரன்களை விட்டுக் கொடுத்த போதிலும், இந்திய பந்துவீச்சு குறித்து வாகன் கவலைப்படவில்லை. ரன் ரேட்டில் மேற்கிந்தியத் தீவுகளை முந்த, ஜிம்பாப்வேயை 108 ரன்களுக்குள் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் களமிறங்கிய இந்தியா, அது இனி பிரச்சினை இல்லை என்பதால், இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றார்தீவிரம் குறைந்தது என்றார்.

"இது இந்தியாவுக்குச் சிறந்த நாள். உலகக் கோப்பை பந்தயத்தில் அவர்கள் மீண்டும் வந்துள்ளனர். உலகின் சிறந்த டி20 அணி இவர்கள்தான் என்று நான் நம்புகிறேன்," என அவர் தெரிவித்தார்.சிவம் தூபேவின் பந்துவீச்சு முறைக்கு மாற்றம் தேவை என முன்னாள் இந்திய கேப்டன் அஜிங்க்யா ரஹானே வலியுறுத்தினார். தொடரில் தடுமாறிய இந்த வேகப்பந்து வீச்சாளர், ஆறு ஆட்டங்களில் ஐந்து விக்கெட்டுகள் எடுத்தும், அவரது எகானமி ரேட் 13-க்கு மேல் இருந்தது.
இது குறித்து பேசிய ரஹானே"சிவம் தூபேவுக்கு நோ-பால்களும், எக்ஸ்ட்ராக்களும்தான் பெரும் வருத்தத்தைத் தரும். அவர் பந்துவீச நேர்ந்தால், அவருக்கு வேறுபட்ட உத்தி வேண்டும். தூபேவுக்கு பவுன்ஸ் மற்றும் நல்ல ஸ்லோ பவுன்சர் இருக்கும். நேராகப் பந்துவீசி, வேக மாற்றங்களைச் செய்தால் சிறப்பாக இருப்பார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அகலமாக வீசும் திட்டம் அவரது பலமல்ல."
"தூபே நம்பிக்கையான வீரர். ரன்கள் கொடுத்தாலும் 'எனக்கு பந்து வேண்டும்' எனக் கேட்பார். பந்துவீச வாய்ப்பு கிடைக்காதபோது வருத்தப்படுவார். தனது பலம் என்ன என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்," என்றார்.தென்னாப்பிரிக்காவிடம் அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு வெற்றிப் பாதைக்கு திரும்பிய இந்தியா, மார்ச் 1 அன்று கொல்கத்தாவில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஒரு முக்கிய காலிறுதிப் போட்டியை எதிர்கொள்ள உள்ளது.