Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வைபவ் சூர்யவன்ஷி-யை குறை சொல்வதா? கொஞ்சம் பொறுமையா இருங்க.. ஜிம்பாப்வே கேப்டன் ராசா பாராட்டு

ஹராரே: ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் கேப்டன் சிகந்தர் ரசா, வளரும் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷியை ஒரு தலைமுறையின் சிறந்த திறமையான வீரர் என்று பாராட்டியுள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது கடினமான தொடக்கத்தைக் கொண்டு, இந்த 15 வயது வீரரை இப்போதே எடைபோட வேண்டாம் என்றும் அவர் ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இங்கிலாந்திற்கு எதிரான அறிமுக டி20 தொடர் சூர்யவன்ஷிக்கு சவாலானதாகவே அமைந்தது. இதில் மூன்று போட்டிகளில் விளையாடிய அவர் 14, 13 மற்றும் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேலும், இத்தொடரை இந்தியா 0-4 என்ற கணக்கில் இழந்தது. இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் 'ஷார்ட்-பால்' வீச்சுகளை எதிர்கொள்ள வைபவ் சூர்யவன்ஷி திணறினார்.

Sikandar Raza

இது குறித்து பேசிய ஜிம்பாப்வே அணி கேப்டன் ஷிக்கந்தர் ராசா, "வைபவ் அசாதாரண திறமை வாய்ந்த ஒரு கிரிக்கெட் வீரர். 15 வயது சிறுவன் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும்போது, வெறும் இரண்டு அல்லது மூன்று போட்டிகளுக்குப் பிறகு அவரை விமர்சிப்பது நியாயமற்றது. வைபவைச் சுற்றி பல சிறந்த அனுபவமிக்க மூத்த கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர் என்று நான் நினைக்கிறேன். அவரைச் சரியாக வழிநடத்தி கையாண்டால், வைபவ் இந்தத் தலைமுறையின் மிகச் சிறந்த திறமையாளராக உருவெடுப்பார்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த 31 வயது வீரரை ஏன் அணியில் சேர்க்கல.. அது ஆர்ச்சரை இங்கிலாந்து நீக்குவதற்கு சமம்.. மொயீன் அலி

இந்த 31 வயது வீரரை ஏன் அணியில் சேர்க்கல.. அது ஆர்ச்சரை இங்கிலாந்து நீக்குவதற்கு சமம்.. மொயீன் அலி

"கடந்த ஓராண்டில் அவர் செய்த சாதனைகள், இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணிக்காக அவர் விளையாடிய விதம் மற்றும் அதே வயதிலேயே சர்வதேச போட்டிகளில் அறிமுகமானது ஆகியவை சாதாரண விஷயங்கள் அல்ல. இக்காலத்தில் இதுபோன்ற கதைகளைக் கேட்பதே அரிது. வைபவ் மிகவும் தனித்துவமானவர். அவர் எவ்வாறு வழிநடத்தப்படுகிறார் என்பது மிக முக்கியமானது" என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த 4 பவுலர்களை இந்திய அணியில் சேர்க்கனும்.. கம்பீர் முடிவு தவறு.. அஸ்வின், பிரசன்னா கருத்து

இந்த 4 பவுலர்களை இந்திய அணியில் சேர்க்கனும்.. கம்பீர் முடிவு தவறு.. அஸ்வின், பிரசன்னா கருத்து

இந்திய அணியின் இந்தத் தொடக்க ஆட்டக்காரர் தற்போது மீண்டும் ஹராரே நகருக்குத் திரும்புகிறார். இந்த மைதானத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில், இங்கிலாந்துக்கு எதிராக வெறும் 80 பந்துகளில் அவர் விளாசிய 175 ரன்கள், இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது. ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் சஞ்சு சாம்சன் இடம்பெறாத நிலையில், வியாழக்கிழமை தொடங்கவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்க சூர்யவன்ஷிக்கு மற்றுமொரு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, July 21, 2026, 19:53 [IST]
Other articles published on Jul 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+