சென்னை: 2026 டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து அஸ்வின் தனது கருத்தை தெரிவித்தார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் இடம்பெற வேண்டும் என அஷ்வின் வலியுறுத்தினார். டாப் ஆர்டரில் ஒரு வலது கை பேட்ஸ்மேன் அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், தற்போது இந்திய அணியின் முதல் மூன்று இடங்களிலும் அபிஷேக், இஷான், திலக் என இடது கை பேட்ஸ்மேன்களே இருப்பதை சுட்டிக்காட்டினார்.
தனது யூடியூப் சேனலில் பேசியஅஷ்வின், "டாப் ஆர்டரில் ஒரு வலது கை பேட்ஸ்மேனை இந்தியா சேர்க்க முடியுமா என்று பார்க்க வேண்டும். அபிஷேக், இஷான், திலக் அனைவரும் இடது கை ஆட்டக்காரர்கள். ஒரு மூன்றாவது இடத்துக்கு ஒருவரைச் சேர்க்க முடியுமா? சிஎஸ்கேவுக்காக விளையாடுவதற்கு முன்பே சஞ்சு சாம்சனால் அவர்களது சொந்த மைதானத்தில் விளையாட முடிந்தது," என்றார்.

"ஒரு சிறந்த சூழ்நிலையில், சஞ்சு நிச்சயமாக அணிக்குள் வர வேண்டும். ஆனால், அவரை மூன்றாவது இடத்தில் விளையாட வைப்பதன் மூலமோ அல்லது தொடக்க வீரராக களமிறக்குவதன் மூலமோ அணியின் சேர்க்கையை நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. சஞ்சு ஒரு சுழற்பந்து வீச்சை சமாளிக்கும் வீரராக சிறப்பாக செயல்படுவார்."

"சுழற்பந்து வீச்சுக்கு எதிராக எங்களுக்கு ஒரு பிரச்சனை உள்ளது, எனவே நான் அவரை அங்கே பயன்படுத்துவேன். அவரை ஐந்தாவது இடத்தில் தள்ளி, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடச் சொல்வேன். யார் பந்து வீசுகிறார்கள் என்பதைப் பொறுத்து, சூர்யகுமார் யாதவ் மூன்றாவது இடத்திலும், திலக் வர்மா அல்லது சஞ்சு நான்காவது இடத்திலும் களமிறங்க வேண்டும் என்று நான் சொல்வேன்."
"இதைத் தொடர்வேன், அணியின் நிலைத்தன்மையை மாற்ற மாட்டேன். அக்சர் படேலை மீண்டும் சேர்ப்பதற்கு நான் நிச்சயமாக ஒப்புதல் அளிப்பேன். ஒரு தொடக்க வீரரோ அல்லது திலக்கோ சஞ்சு சாம்சனுக்கு வழி விடுவார்கள் என்று நான் நினைக்கிறேன். ரிங்கு வெளியேறுவார் என்றும், வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்ஷர் படேலுடன் அவர்கள் தொடர்வார்கள் என்றும் நான் நினைக்கிறேன். இது எனது விருப்பம்."என்று அஸ்வின் கூறினார்.

ஜிம்பாப்வே எதிரான போட்டியில் தோல்வியடைந்தால், 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்தியாவின் பயணம் முடிவுக்கு வரும்.தென்னாப்பிரிக்காவுடனான சூப்பர் 8 மோதலில் அக்ஷர் அணியில் இடம்பெறவில்லை. இப்போட்டி கட்டாயம் வெல்ல வேண்டியது என்பதால், துணை கேப்டனை மீண்டும் அணிக்குள் கொண்டு வர நிர்வாகம் பரிசீலிக்கலாம்.