
ருத்துராஜ் சதம்
இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி நியூசிலாந்து பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.இருப்பினும் சிஎஸ்கே வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். 127 பந்துகளில் 108 ரன்கள் அடித்துள்ள அவர் 12 பவுண்டரிகளையும் இரண்டு சிக்ஸர்களையும் அடித்தார். ரஜட் பட்டிதார் 30 ரன்களும், உபேந்திரா யாதவ் 76 ரன்களும் எடுக்க இந்திய ஏ அணி 293 ரன்கள் எடுத்தது.

இந்தியா முன்னிலை
இதனை அடுத்து நியூசிலாந்து ஏ அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.இதில் மார்க் சாப்மன் அதிகபட்சமாக 92 ரன்கள் எடுக்க சீன் சோலியா அரை சதம் அடித்தார். மற்ற வீரர்கள் யாரும் துணை நிற்காததால் நியூசிலாந்து ஏணி 237 ரன்கள் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து 56 ரன்கள் முன்னிலையுடன் இந்திய ஏ அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. இதில் தொடக்க ஆட்டக்காரர் அபிமன்யூ ஈஸ்வரன் 4 ரன்களில் வெளியேறினார்.

359 ரன்கள்
கேப்டன் பிரயாங் பஞ்சால் 17 ரன்களுடனும் ருத்துராஜ் கெய்க்வாட் 18 ரன்கள் உடனும் 3ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் பிரியாங் பஞ்சால் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய ருத்துராஜ் கெய்க்வாட், 2வது இன்னிங்சிலும் சதம் அடிக்கும் வாய்ப்பை 6 ரன்களில் தவறவிட்டு 94 ரன்களில் ஆட்டமிழந்ததார்'.இதில் பட்டிதார் சதம் விளாச, சர்ஃபிராஸ் கான் அரைசதம் அடித்தார். இதனால் இந்திய ஏ அணி 2வது இன்னிங்சில் 359 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது.

இந்தியா வெற்றி
இதனையடுத்து 416 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 20 ரன்கள் எடுத்து 4ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இதில் தொடக்க வீரர் ஜோ கார்டர் சதம விளாச, கிலிவர் மற்றும் சாப்மான் முறையே 44 ரன்கள் மற்றும் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். ,இதன் மூலம் நியூசிலாந்து அணி 302 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது.


Click it and Unblock the Notifications











